வியாழன், 30 ஜூன், 2011


வியாழன், 16 ஜூன், 2011



பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் நேற்று முன்தினம் ஒளிபரப்பிய இலங்கையின் படுகொலைக்களம் என்ற ஆவணப்படத்தை உலகெங்கிலும் இருந்து 7 இலட்சம் மக்கள் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சனல் 4 ஒளிபரப்பிய, இலங்கைப் படையினரால் நிர்வாணமாக இழுத்து வரப்பட்ட தமிழ் கைதிகள் கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகள், பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சடலங்களாக காணப்படும் காட்சிகள், வாகனங்களில் இழுத்து வரப்படும் சடலங்கள், வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்கள் என்பன மிகவும் கொடுமையாக அமைந்திருந்தன.

இந்த ஆவணப்படத்தை 7 இலட்சம் பேர் நேரிடையாகவும், ஒரு இலட்சம் பேர் சனல் 4 பிளஸ் வன் அலைவரிசை மூலமும் பார்வையிட்டுள்ளர். பிரித்தானியிவின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக மக்கள் பார்வையிட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக “இலங்கையின் கொலைக்களம்” ஆவணப்படம் நிகழ்ச்சி அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.thx-tamilenn



சனல் 4 ஒளிபரப்பிய இலங்கையின் படுகொலைக்களம் காணொளி குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் அவதானத்துடன் இருப்பதாகவும், ஆனால் அவர் அந்த காணொளியை பார்க்கவில்லை என்றும் ஐ.நா பேச்சாளர் மார்டீன் நெசர்க்கி தெரிவித்துள்ளார்.

ஆனால் இறுதிக்கட்டப் போரின் போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பக்கூற வேண்டும் என்பதில் பான் கீ மூன் தெளிவாக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

போர்க் குற்றம் தொடர்பாக அனைத்துலக விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கையின் இணக்கம் அல்லது பாதுகாப்புச்சபை, பொதுச்சபை மற்றும் மனிதஉரிமை அமைப்புக்களின் ஒப்புதல் கிடைக்கப்பெற வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



முள்ளிவாய்கால் இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசால் சிறைப்பிடிக்கபட்ட அப்பாவி தமிழ் இளைஞர்களை தென் இந்திய தமிழ் சினிமா பாடலுக்கு அட்டம் போட வைத்து வேடிக்கை பார்கிறது இலங்கை அரசு.

குறித்த பாடலுக்கான ஆடலையே இலங்கை அரசு தமது புனர்வாழ்வு செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக எடுத்துக் காட்டியுள்ளது. உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் பல கோடி கணக்கான பணத்தினை தமிழ் இளைஞர் யுவதிகளின் புனர்வாழ்வுக்கு என பெற்றுள்ள இலங்கை அரசு அதனை, தென் இலங்கையில் தமது தேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறது.

புனர்வாழ்வு என கூறிக்கொண்டு தமது வருவாயை திரட்டுவதற்காக அப்பாவி தமிழ் இளைஞர்களை தடுத்து முகாம்களில் அடைத்து வைத்து அவர்களின் வாழ்வின் பொன்னான காலத்தை சிறைக்குள் மண்ணாக்கி பிழைப்பு நடத்துவதை இது உறுதி செய்கிறது.


மனித உரிமை மீறல்கள் சம்பவம் குறித்த விசாரணை தொடர்பில் இலங்கைக்கே முதலிடம்
[ வியாழக்கிழமை, 16 யூன் 2011, 08:23.48 AM GMT ]
இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் சம்பவங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் விடயத்தில் இலங்கைக்கே முன்னுரிமை உள்ளதாக ஐ.நா. தெரிவிக்கின்றது.
மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தானாக முன்வந்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அபிப்பிராயமாகும் என்று அவரது பேச்சாளர் மார்ட்டின் நெசர்கி குறிப்பிட்டுள்ளார்.
செனல்-04 காணொளிக்காட்சிகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவானது அதன் அறிக்கையில் சர்வதேச விசாரணைக் குழுவொன்றின் மூலம் அதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.
ஆனாலும் அவ்வாறான விசாரணைகளை மேற்கொள்வதாயின் குறைந்த பட்சம் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அதற்கான பிரேரணையொன்று நிறைவேற்றப்படவேண்டும்.அதற்கும் அங்கத்துவ நாடுகளின் அனுமதி தேவைப்படும்.
அவ்வாறின்றி சர்வதேச விசாரணைக்கமிஷன் ஒன்றை அமைப்பதற்கான விடயம் நடைமுறைச்சாத்தியமற்றதாகி விடும். ஆயினும் இலங்கை தானாக முன்வந்து இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதே சிறந்தது என்று ஐ.நா. செயலாளர் நாயகம் கருதுகின்றார் என்றும் மார்ட்டின் நெசர்க்கி மேலும் தெரிவித்துள்ளார்.  thx-tamilwin

'இலங்கையின் கொலைக்களம்’ ஐ.நா சபையில் காட்சிப்படுத்தப்படவுள்ளது : இன்னர் சிற்றி பிரஸ்
[ வியாழக்கிழமை, 16 யூன் 2011, 07:41.36 AM GMT ]
இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையிலான சனல் 4வினால் வெளியிடப்பட்ட 'இலங்கையின் கொலைக்களம்” என்ற காணொளி தொடர்பில் நாள் சென்ற நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆவணப்படம் தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்று இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் வழங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் நெசர்கி, பொது செயலாளர் பான் கீ மூன் இன்னும் இந்த ஆவணப்படத்தை பார்க்கவில்லை என்று குறிப்பிட்டார்.
எனினும் அந்த படத்தின் உட்பொருள் குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாக நெசர்கி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த ஏப்ரல் மாதம் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்திருந்த பான் கீ மூன், இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற பகுதியில் ஐக்கிய நாடுகள் பணியாளர்களின் செயற்பாடுகள் குறித்து மீளாய்வு செய்யவிருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சபையின் பணியாளர்கள் யுத்த பிரதேசத்தில் இருந்து வெளியேறுவதையும், இரண்டு சரணடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டமையையும், சனல் 4 ஆவணப்படம் வெளிக்காட்டி இருந்தது.
சரணடைந்த இரண்டு தமிழீழ விடுதலைப்புலி தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக பான் கீ மூனும், ஐக்கிய நாடுகளின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாரும் உறுதி அளித்திருந்ததாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
போரின் போது ஐக்கிய நாடுகள் பணியாளர்களின் நடவடிக்கைகள், பான் கீ மூன் இந்த கருத்தை வெளியிட்டு 40 நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில், அது தொடர்பில் இதுவரையில் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் வழங்கிய பேச்சாளர், பான் கீ மூன் ஐக்கிய நாடுகள் சபைகளின் வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடர்பில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து சிந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை இன்றைய தினம் மறுசீரமைக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் 21ம் திகதி பொது சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
அதற்கு முன்னர் இந்த இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படம் ஐக்கிய நாடுகள் சபையில் காட்சிப்படுத்தப்படலாம் எனவும் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஐ.நா. நிபுணர்கள் குழு வெளியிட்ட அறிக்கையை பான் கீ மூன் நிராகரிப்பாரா அல்லது ஏற்றுக் கொள்வாரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, இது பொதுச்சபையில் ஏற்றுக்கொள்ளப் படுமாக இருந்தால், அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று நெசர்கி குறிப்பி

இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐ.நா விசாரணை செய்ய வேண்டும் : அமெரிக்கா கோரிக்கை
[ வியாழக்கிழமை, 16 யூன் 2011, 04:20.46 AM GMT ]
இலங்கை உட்பட்ட 14 நாடுகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அமெரிக்கா கோரியுள்ளது
இலங்கை, சீனா, ஈரான், லிபியா, வடகொரியா, சூடான், சிரியா, வெனிசூலா, யேமன், ஸிம்பாப்வே, கியூபா, பெலாரஸ், பஹ்ரெய்ன், மியன்மார் ஆகிய நாடுகளிலேயே மனித உரிமைமீறல் இடம்பெறுவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் Eileen Chamberlain Donahoe  இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.thx-tamilwin

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவுஸ்திரேலியப் புலனாய்வு அதிகாரிகள்
[ வியாழக்கிழமை, 16 யூன் 2011, 04:31.44 AM GMT ]
ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோதக்குடியேற்றங்களைத் தடுக்கும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவுஸ்திரேலியப் புலனாய்வாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் வழமைக்கு மாறான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கிலேயே பிரஸ்தாப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலியத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான மூலமான சட்டவிரோத நடவடிக்கைகளைகத் தடுப்பதற்காக இலங்கை குடிவரவு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவுஸ்திரேலிய அதிகாரிகளும் இணைந்து பணியாற்றுகின்றனர். அதற்காக அண்மைக்காலத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகளவான அவுஸ்திரேலிய அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆட்கடத்தல்காரர்களிடம் மக்கள் சிக்கிக் கொள்வது ஆபத்தானது மட்டுமன்றி சட்டவிரோத கடத்தல்காரர்களிடம் ஏமாறும்  பொதுமக்கள் பணத்தையும், உயிரையும் இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கும் முகம் கொடுக்கின்றனர்.
அத்துடன் கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான சட்டவிரோத கடல் பயணத்தின் போது நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர். அவ்வாறான நிலைமைகளைத் தடுப்பதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவுஸ்திரேலியத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈவிகேஎஸ் வார்த்தையை அளந்து பேச வேண்டும் : திருமாவளவன்
முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்,  கடந்த 14ம் தேதி அன்று  ஈரோடு ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் சார்பில், ஈரோடு ரயில் நிலையத்தில், நடைபெற்ற சேலம் கோட்ட சிறப்பு விளக்க கூட்டத்தில் பேசியபோது,
’’காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி இல்லாவிட்டால், கூண்டோடு உள்ளே போகவேண்டிவரும் என்பதால் தான் கூட்டணி தொடரும் என்று பேசிவருகிறார் கலைஞர்.

காங்கிரஸ் கட்சி எப்போதும் ஊழலுக்கு துணை போகாது.    கட்சியின் பெரிய தலைவரான கல்மாடி உழல் செய்துவிட்டதாக தெரிந்த உடனே அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டனர்.


கூடா நட்பு உங்களுக்கு லேட்டாகத்தான் தெரிகிறது.    அனால் நான் ஒரு மாதம் முன்பே சவகாச தோஷம் பற்றி பேசிவிட்டேன்’’ என்று கூறினார்.

இது குறித்து இன்று  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 
’’ஈவிகேஎஸ்.இளங்கோவன் அளவுக்கு அதிகமாகப் பேசுகிறார். அவர் வார்த்தையை அளந்து பேச வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.
மேலும் அவர்,  ‘’வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடனான கூட்டணி தொடரும்’’ என அவர் அறிவித்தார்.

முதல் கட்டமாக 25 லட்சம் கிரைண்டர் மிக்சி, மின் விசிறி
 தாலுகா அலுவலகம் மூலம் வழங்க ஏற்பாடு


பேறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதியன்று பெண்களுக்கு மின் விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று கவர்னர் உரையிலும் அறிவிக்கப்பட்டது.

இதற்கான பூர்வாங்க பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  முதற்கட்டமாக இந்த ஆண்டு 25 லட்சம் குடும்பங்களுக்கு மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. பொது விநியோக திட்டத்தில் அரிசி பெற தகுதி உடைய சுமார் 1 கோடியே 83 லட்சம் குடும்பங்களுக்கு படிப்படியாக விரிவுபடுத்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றை ரேஷன் கடை மூலம் வழங்க இட வசதி போதாது என்பதால் தாலுகா அலுவலகங்கள் மூலம் தாசில்தார் கண்காணிப்பில் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே 2001-2005 ஜெயலலிதா ஆட்சியில் வெள்ள நிவாரணப் பணம் தாலுகா அலுவலகம் மூலம் தான் மக்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டது. அதே முறையை இப்போது பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்துக்கு மட்டும் சுமார் 2 கோடி மிக்சி, கிரைண்டர், மின் விசிறி தேவைப்படும் என்பதால் அரசின் டெண்டரை பெற முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. தரமான பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதால் முன்னணி நிறுவனங்கள் டெண்டரில் பங்கு பெறலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. டேபிள் டாப் வெட் கிரைண்டர், மிக்சி டெண்டர் கேட்பவர்கள் ரூ. 10 லட்சம் முன் பணம் கட்ட வேண்டும். மின் விசிறி சப்ளை செய்ய விரும்புபவர்கள் ரூ. 5 லட்சம் முன் பணம் கட்ட வேண்டும்.

கிரைண்டர், மிக்சி, மின் விசிறி தரம் எந்த வகையில் இருக்க வேண்டும் என்பதை முன்னணி நிறுவனங்களுக்கு விளக்குவதற்காக வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை கூட்டம் சென்னையில் நடத்தப்பட உள்ளது. அதன் பிறகு விருப்பப்பட்ட நிறுவனங்கள் ஜூலை மாதம் 11-ந்தேதி வரை டெண்டர் போட கால அவகாசம் கொடுக்கப்படும்.

புதன், 15 ஜூன், 2011

CHANNEL 4.(15.05.2011)


சிறீலங்கா அகதிகள் நாடுகடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது

சிறீலங்காவில் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுவருதாக சனல் போஃர் நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளபோதும், பிரித்தானியாவில் அகதித்தஞ்சம் கோரியவர்களில் ஒரு தொகுதியினர் நாடுகடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த ரெலிகிராஃப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறீலங்கா பாதுகாப்பானது அல்ல என மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துவரும்போதும், பிரித்தானியாவில் அகதித் தஞ்சம் கோரியவர்களில் 40 பேர் நாடுகடத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறீலங்காவில் மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சனல் போஃர் தொலைக்காட்சி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது.
ஆனால் தமிழர்களை நாளை (16) நாடுகடத்துவதற்கு பிரித்தானியா அரசு திட்டமிட்டுள்ளது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.thxx.telegraph





அனுஷ்கா - நாகார்ஜூனா மகன் திருமண நிச்சயதார்த்தம்?



நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்தவர் நடிகர் நாகார்ஜூனா. அவரது மகன் நாக சைதன்யாவும் நடிகையை காதலித்து திருமணம் செய்யவுள்ளார்.

நடிகை அனுஷ்காவை நிஜ வாழ்க்கை ஜோடியாக்கப் போகிறார் நாக சைதன்யா. கடந்த வாரத்தில் இவருக்கும் - அனுஷ்காவுக்கும் நிச்சயதார்த்தமே நடந்து முடிந்துவிட்டதாக கிசுகிசுக்கிறார்கள்.


அமலா முன்னணி நடிகையாக இருக்கும் போதுதான் நாகார்ஜுனா அவரை திருமணம் செய்து கொண்டார். அதே மாதிரி அனுஷ்கா முன்னணி நடிகையாக இருக்கும் போதே அவரை நாக சைதன்யா நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 thx-nakkeran


யாழில் இளவயது கருக்கலைப்புகள் அதிகரிப்பு!



யாழ். மாவட்டத்தில் சட்டவிரோத இளவயது கருக்கலைப்புகள் அதிகரித்து வருகின்றது என்று யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். இதில் பிரபல பாடசாலை மாணவிகளும் உள்ளடங்குகின்றனர் என்றும் அவர் கூறினார்.
யாழ். மாவட்டத்தின் கலாச்சாரப் பிறழ்வும், சமூகச் சீரழிவுச் செய்பாடுகளும் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொண்டாலும், மனச்சாட்சிக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.
இளம் பெண் பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். அத்துடன், இளவயது பெண் பிள்ளைகள் விடயத்தில் கூடிய அக்கறை எடுத்து அவர்களின் படிப்பு, பாதுகாப்பு இரண்டு விடயங்களில் பெற்றோர் கண்டிப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.saritham


ஜெயலலிதாவுடன் ரஜினி தொலைபேசியில் பேச்சு!




சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர்  ரஜினிகாந்த், டிஸ்சார்ஜ் ஆனார்.
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனாலும், தொடர்ச்சியான பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளுக்காக தொடர்ந்து சிங்கப்பூரிலேயே ஒரு நவீன அபார்ட்மெண்டில் தங்கியுள்ளார். இந்த அபார்ட்மெண்ட் மிகுந்த பாதுகாப்பு மற்றும் சகல வசதிகளும் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ரஜினிகாந்த் சிங்கப்பூரில் இருந்து முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் 15.06.2011 அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது ரஜினிகாந்த், தான் தற்போது சிங்கப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, டிஸ்சார்ஜ் ஆகி வந்தவுடன் முதல் அமைச்சருடன் பேச முடிவு செய்து, தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் இன்னும் ஒன்றரை மாதங்களில் இந்தியா திரும்ப இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ரஜினிகாந்தின் குரலை தொலைபேசியில் கேட்டதும் மகிழ்ச்சியடைந்த ஜெயலலிதா, அவர் குணமடைந்தது குறித்து மகிழ்ச்சியைத் பகிர்ந்து கொள்வதாகவும், விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.thx-saritham


போர்க்குற்றம் தொடர்பில் அல்சீரா ஊடகவியலாளரிடம் சிக்கி தவித்த அரசின் ஆலோசகர்
[ புதன்கிழமை, 15 யூன் 2011, 06:17.16 PM GMT ]
பிரித்தானியாவின் செனல் 4 ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆவணப் படம் போலியானது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
வேண்டுமென்றே பொதுமக்களை படுகொலை செய்வது போன்ற காட்சிகள் குறித்த ஆவணப்படத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எந்தவிதமான உறுதிப்படுத்தல்களும் இன்றி குறித்த வீடியோ காட்சிகளை செனல்4 ஊடகம் வெளியிட்டுள்ளமை வருத்தமளிப்பதாக லண்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான வீடியோ காட்சிகள் இலங்கை வாழ் பல்லின மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில சர்வதேச ஊடகங்கள் வேண்டுமென்றே ஒரு சிலரைத் திருப்திபடுத்தும் நோக்கில் இவ்வாறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வெளியே வாழும் பிரிவினைவாத சக்திகளின் ஆதரவுடன் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இன்நிலையில் இன்று வெளியான சனல் 4 கணொளி தொடர்பில் ஊடகவியலாளரின் காரசாரமான கேள்விகளுக்கு இலங்கை மனித உரிமைகளின் செயலாளர் ராஐீவ் விஐயசிங்க விழிகள் இரண்டும் பிதுங்க தண்டு தடுமாறி பதிலளித்துள்ளார்.



இந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டாம்: விமல், சம்பிக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்து
[ புதன்கிழமை, 15 யூன் 2011, 04:45.42 PM GMT ]
இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாட்டினதும் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டாமென அமைச்சர்கள் விமல் வீரவங்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
13வது அரசியல் அமைப்பு திருத்ததில் வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.
ஆயினும் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவங்ச ஆகியோரின் அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி தனது தீர்மானத்தை மாற்றிக்கொண்டதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்த போது இந்த அமைச்சர்கள் இருவரும் நாடாளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலக்திற்கு சென்று சில மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் போது இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிப்பணிந்து தீர்மானங்களை எடுத்தால் ஜனாதிபதியுடன் கைகோர்த்துள்ள தேசப்பற்றுள்ள சக்திகள் விலகிச் செல்லக் கூடும் எனவும் ஜனாதிபதி தனிமைப்படுத்தப்படலாம் எனவும் கூறியுள்ளனர்.
இந்தியாவும் மேற்குலக நாடுகளும் அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி செய்து வரும் நிலையில் அவர்களின் அழுத்தங்களுக்கு கீழ்ப்படிந்து செயற்படுவதானது தனிப்பட்ட ரீதியில் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பானது என கூறியுள்ள அமைச்சர்கள் எவ்வாறான வெளிநாட்டு அழுத்தங்கள் வந்த போதிலும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுத்தது போன்று இந்த சந்தர்ப்பத்திலும் தீர்க்கமான முடிவுகளை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர். 
இந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்துஇ 13வது அரசியல் அமைப்புத் திருத்;தத்தை அமுல்படுத்தினால், அதனால் ஏற்படப்படப் போகும் சாதக பலன்களை  ஜே.வி.பி பெற்றுக்கொள்ளும் எனவும் அமைச்சர்கள் இருவரும் ஜனாதிபதியிடம் தெளிவுப்படுத்தியுள்ளனர்.thanks-tamilwin


ஐ.நா. அறிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பதிலளிக்க வேண்டும்: பிரித்தானிய தொழிற்கட்சி
[ புதன்கிழமை, 15 யூன் 2011, 04:36.45 PM GMT ]
ஐ.நா அறிக்கையில் இலங்கை அரசு மீது முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கவேண்டும் என பிரித்தானிய தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது. 
இலங்கையின் அண்மைய அபிவிருத்திகள் தொடர்பாகவும், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் நவனீதம்பிள்ளை உரையாற்றியது தொடர்பாகவும் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு பிரித்தானிய தொழிற்கட்சியின் நிழல் வெளிவிவகாரச் செயலாளர் டக்ளஸ் அலென்சாண்டர்  குறிப்பிட்டுள்ளார்.  
இறுதிக்கட்டப் போரில் 2000 ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதத்திற்கு இடையிலான காலப்பகுதியில் அரசாங்க படைகளும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என நிபுணர்குழு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மனிதஉரிமை மீறலாக அமைந்துள்ளதுடன் போர்க்குற்றத்திற்கு இட்டுச் செல்லக்கூடியது என்று அறிக்கையில் சில விடயங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு அரசாங்கம் பதிலளிக்கவேண்டும். அதேவேளை அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தின் சொந்த விசாரணை குழுவானது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினது நம்பகத்தன்மை குறித்து பல கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இந்த ஆணைக்குழு அனைத்துலகப் பிரதிநிதிகளையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ஏற்கனவே கால எல்லை நீடிக்கப்பட்டுள்ள இந்த வருடம் நவம்பருக்கு முன்னர் தனது அறிக்கையை வெளியிட வேண்டும்.
இந்த அறிக்கை ஐ.நா நிபுணர்குழு பரிந்துரைத்துள்ள விடயங்களை உள்ளடக்கியதாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். உண்மையான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு நீதி கிடைக்க வழி செய்து, போர்க்குற்றம் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டால் மாத்திரமே இலங்கையில் அமைதியைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் டக்ளஸ் அலென்சாண்டர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.


பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்ட கூட்டம் !


பிரித்தானியாவின் நாடாளுமன்ற வளாகத்தில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்ட கூட்டம் ஒன்று நாளை வியாழக்கிழமை (யூன் 16) இடம்பெற இருப்பதாக நா.த.அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம், பிரித்தானியா அரசியல் மட்டத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நா.த.அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கெடுக்கின்றனர்.




தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர்குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் - பிரித்தானியாவில் இருந்து தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுதல் தொடர்பிலான விவகாரம் மற்றும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் நா.த.அரங்சாங்கத்தின் வகிபாகம் ஆகிய விடயங்களை முன்னிறுத்தியதாக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐநா நிபுணர் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டவாறு, அனைத்துல நீதிவிசாரணை மற்றும் அனைத்துலக பொறிமுறை ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவினையும், இதற்கான அழுத்தம் அரச மட்டத்தில் மேற்கொள்வதற்கு வேண்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது


இலக்கு வைக்கப்படும் றெஜி! சிறிலங்கா புலனாய்வுத்துறை தீவீரம்!
[ புதன்கிழமை, 15 யூன் 2011, 02:34.11 PM GMT ]
போர்குற்றங்கள் குறித்தான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் சிறிலங்கா அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் மீது சில போர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஐநா நிபுணர் குழுவின் குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரசு தொடர்சியாக மறுத்து வரும் நிலையில் விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறவும் விசாரணைகளுக்கு தயாரெனவும் தமிழர் புனர்வாழ்வுக்கழக பணிப்பாளர் றெஜி அவர்கள் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
விடுதலைப்புலிகளின் பல மூத்த உறுப்பினர்கள் இறுதிகட்ட யுத்தத்தில் சாவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் எஞ்சியுள்ள மூத்த உறுப்பினர்களில் ஒருவராக றெஜி இருக்கின்றார்.
விடுதலைப்புலிகளின் நிலைப்பாடாக றெஜி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு தெரிவிக்கப்பட்ட இக்கூற்று சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.
ஐ.நாவின் நிபுணர் குழுவின் குற்றச்சாட்டுக்களை தொடர்சியாக நிராகரித்து வரும் சிறிலங்கா அரசுக்கு - விடுதலைப் புலிகளின் இந்த இராஜதந்திர நகர்வு பெரும் நெருக்கடியை சர்வதேச மட்டத்தில் தோற்றுவித்துள்ளதான இராதந்திர அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
குற்றம்சாட்டப்பட்டுள்ள இருதரப்பில் ஓரு தரப்பு விசாரணைகளை சந்திக்க தயார் எனும் நிலைப்பாடு - மறுதரப்புக்கு சங்கடத்தை ஏற்படுத்தை ஏற்படுத்துவது முக்கியமானதொரு சர்வதேச இராதந்திர பொறிமுறை.
இந்நிலையிலயே றெஜியின் இந்த நிலைப்பாட்டை நோக்கி சர்வதேச சமுகம் நகர்வதற்கு முன்னர் - றெஜியை பலவீனப்படுத்துவன் ஊடாக விடுதலைப்புலிகளின் சர்வதேச நிலைப்பாட்டடை பலவீனப்படுத்தலாம் என சிறிலங்கா அரசு செயற்படத் தொடங்கியுள்ளதாக கொழும்பில் இருந்து இயங்கி வரும் ஆங்கில இணைய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை கொழுப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துரைத்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல ' விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை முடக்குவதற்கு சிறிலங்கா தயாராகி வருவதாக தெரவித்துள்ளார்.
றெஜியை பணிப்பாளராக கொண்டு வெளிநாடுகளில் இயங்கி வருகின்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை சிதைப்பதை முதற்பொறிமுறையாக சிறிலங்கா அரசு வகுத்துள்ளது.
ஏற்கனவே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் இயங்கி வருகின்ற புனர்வாழ்வுக் கழகத்தை முடக்க வேண்டிய நிலையை சிறிலங்கா எடுத்துள்ளது.
குறிப்பாக வெளிநாடுகளில் தமிழர்கள் பரந்தளவில் பெருவாரியாக ஒன்றுகூடுகின்ற நிகழ்வுகளில் ஒன்றாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தமிழர் விளையாட்டு விழாவும் ஒன்றாகவுள்ளது.
இந்நிலையிலேயே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் பிரான்சில் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழர் விளையாட்டு விழாவை முடக்குவதற்கு சிறிலங்கா முனைந்து வருகின்றது.
கடந்த இருவாரங்களுக்கு முன்னர் கொழும்புக்கு அவசர அவசரமாக அழைக்கப்பட்ட பிரான்சுக்கான சிறிலங்கா தூதுவரிடம் இதற்கான வேலைத்திட்டத்தை கையளித்துள்ள சிறிலங்காவின் சா்வதேச புலனாய்வுத்துறை - இதற்கு பக்கத்துணையாக சிறிலங்கா கைக்கூலிகளாக இருக்கின்ற சில தமிழர்களையும் இணைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் சேட்டைகள் மற்றும் நிதிமோசடி காரணமாக விடுதலைப் புலிகளினால் தண்டிக்கபட்டு வெளியேற்றபட்ட இரும்பொறை எனும் அரவிந்தன் எனும் நபரே தமிழர்களுக்கான சர்வதேச இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இரும்பொறையின் செயற்பாடுகள் குறித்து விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை உள்ளக அறிக்கையில் எச்சரிக்கை செயற்பாட்டாளர்களுக்கு விடுத்திருந்தது.
பிரான்சில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழர் விளையாட்டு விழாவை முடக்கும் சதி நடவடிக்கைகளின் தொடக்கமாகமாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கே.பியின் வசமாகியிருந்தது எனும் செய்தி சமீபத்தில் திட்டமிட்டு பரப்பப்பட்டிருந்தது.
சிறிலங்கா சர்வதேச புலனாய்வுத் துறையின் திட்டமிட்ட சதிவலைச் செய்தியை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உடனடியாக மறுத்ததுடன் தெளிவான அறிக்கையூடாக மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
சிறிலங்கா அரசின் சதிநடவடிக்கைகளின் தொடர்சியாக விளையாட்டு விழா ஆண்டு தோறும் இடம்பெற்று வருகின்ற மைதான முன்றலை முடக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.
குறித்த மைதானத்தை உள்ளடக்கியதான நகரசபையினைத் தொடர்பு கொண்டு கைக்கூலிகள் 'பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பணம் சேர்க்கவே விளையாட்டு விழா இடம்பெறுவதாக' கதைஅகூறியுள்ளனர்.
யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலங்களில் இத்தகைய செய்பாடுகளை சிறிலங்காத் தூதரகம் முன்னெடுத்துள்ள நிலையில் தற்போது சிறிலங்காவின் கைக்கூலிகளாக தமிழர்கள் ஈடுபவது குறித்து நகரசபை ஆச்சரியம் கொண்டுள்ளது.
இந்தச் சதிவலை வேலைத்திட்டங்களை முடியடிக்கும் நோக்கில் நீண்டகாலமாக விடுதலைக்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றவர்கள் தமிழர் விளையாட்டு விழாவை திறம்பட நடாத்துவதற்கு தயாராகி வருவதாக பாரிஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரான்சுக்கான சிறிலங்காத் தூதுவர் தயான் ஜெயதிலக மற்றும் இரும்பொறை ஆகியோரின் கூட்டுச் சதி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு உள்ளக அறிக்கை மூலம் செயற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருதாக தமிழர் அமைப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐ.நாவின் நிபுணர் குழுவின் குற்றச்சாட்டுக்களை தொடர்சியாக நிராகரித்து வரும் சிறிலங்கா அரசு - விசாரணைகளுக்கு ஒத்துழைக்க தயார் என அறிவித்துள்ள விடுதலைப் புலிகளின் இராஜதந்திர நிலைப்பாட்டை - அனைத்துல சமூகத்தின் சாதகமாக நோக்குவதற்கு முன்னர் - தமிழர்களை பலவீனப்படுத்த சிறிலங்காவின் செய்திட்டத்துடன் கைக்கூலிகளாக தமிழர்கள் சிலர் மாறியுள்ளமை இன்றைய அவசரமானதும் அபாயகரமானதுமான எச்சரிக்கை எனலாம்.thanks-tamilwin