வியாழன், 16 ஜூன், 2011


இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐ.நா விசாரணை செய்ய வேண்டும் : அமெரிக்கா கோரிக்கை
[ வியாழக்கிழமை, 16 யூன் 2011, 04:20.46 AM GMT ]
இலங்கை உட்பட்ட 14 நாடுகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அமெரிக்கா கோரியுள்ளது
இலங்கை, சீனா, ஈரான், லிபியா, வடகொரியா, சூடான், சிரியா, வெனிசூலா, யேமன், ஸிம்பாப்வே, கியூபா, பெலாரஸ், பஹ்ரெய்ன், மியன்மார் ஆகிய நாடுகளிலேயே மனித உரிமைமீறல் இடம்பெறுவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் Eileen Chamberlain Donahoe  இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.thx-tamilwin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக