திங்கள், 8 ஆகஸ்ட், 2011

கல்விச் சுற்றுலாவுக்குப் புறப்பட்டனர் புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய மாணவர்கள் .


புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய மாணவர்கள் நேற்றுக் கல்விச் சுற்றுலாவாகத் தென்னிலங்கைக்குப் புறப்பட்டனர்.

இரண்டாம் தவணை நிறைவடைந்தவுடன் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் இச் சுற்றுலாவில் பங்கெடுத்துள்ளனர்.

இக் கல்விச் சுற்றுலாவுக்கான நிதியுதவியினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.