சனி, 23 ஜூலை, 2011

who is he? Siva_Sandrabalan-Sumi(18.08.2010-Switzerland .drama.antha aalamarathadiyil )
இன்று அதிகாலை வெளியான கிளிநொச்சி மாவட்டப் பிரதேச சபைகளில் ஒன்றின் முதலாவது முடிவு: கரைச்சிப் பிரதேச சபையில் பதினைந்து ஆசனங்களைக் கைப்பற்றிய கூட்டமைப்பு, மலைத்து நிற்கிறது சிறிலங்கா அரசு
[Sunday, 2011-07-24 05:00:01]
கரைச்சிப் பிரதேச சபைக்கான தோ்தல் முடிவு,இலங்கை தமிழரசுக் கட்சி வாக்குகள் 18,609 ஆசனங்கள் 15,ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வாக்குகள் 6,097 ஆசனங்கள் 4
ஊர்காவற்றுறை -பிரதேசசபை
------------------------------------------
ஐ.சு.ம.முன்னணி 8843- 4ஆசனங்கள்
தமிழரசுக் கட்சி 805 - 1ஆசனங்கள்


வேலணை -பிரதேச சபை
------------------------------------------
ஐ.சு.ம.முன்னணி 3973 - 8 ஆசனங்கள்
தமிழரசுக் கட்சி 2221 - 3ஆசனங்கள்

துணுக்காய் -பிரதேச சபை
------------------------------------------

தமிழரசுக் கட்சி 2195 - 7ஆசனங்கள்
ஐ.சு.ம.முன்னணி 847- 2ஆசனங்கள்

குச்சவெளி -பிரதேச சபை
----------------------------------------------

ஐ.சு.ம.முன்னணி 8451- 6ஆசனங்கள்
தமிழரசுக் கட்சி 2942 -2ஆசனங்கள்
ஐ.தே.கட்சி 659 - 1ஆசனங்கள்
(மடத்துவெளியான்)



சாவகச்சேரி நகரசபை முழுமையாக இலங்கை தமிழரசு கட்சி வசம் - வலி. வடக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி அமோக வெற்றி
[ சனிக்கிழமை, 23 யூலை 2011, 09:17.56 PM GMT ]
யாழ்ப்பாண சாவகச்சேரி நகரசபையின் முழு ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி 437 வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 232 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 28 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளதன.

சாவகச்சேரி நகரசபை தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 5605, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 347 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 5952 ஆகும்
பருத்தித்துறை நகரசபையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி
பருத்தித்துறை நகரசபையினையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 3263 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1107 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 115 வாக்குகளையும் சுயேட்சைக்குழு 7 வாக்குகளையும் பெற்றுள்ளன.

பருத்தித்துறை நகரசபை தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 4493, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 270 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 4763 ஆகும்.
நல்லூர் பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

யாழ்ப்பாண நல்லூர் பிரதேச சபையினையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 10107 வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2238 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 105 வாக்குகளை பெற்றுள்ளபோதிலும் ஆசனம் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை..

நல்லூர் பிரதேச சபை தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 12505, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 77 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 13257 ஆகும்.
வலி. வடக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி அமோக வெற்றி

யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசமாகியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 12,065 வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4919 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி 78 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 17062, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1643 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 18705 ஆகும்.
திருக்கோவில் பிரதேச சபையும் இலங்கை தமிழரசு கட்சி வசம்

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசமாகியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 6865 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1249 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி 810 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளதன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 497 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது.

திருக்கோவில் பிரதேச தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 9421, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 355 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 18,076 ஆகும்.
வலி. தென்மேற்கு பிரதேச சபையும் இலங்கை தமிழரசு கட்சி வசம்

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 11,954 வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4,428 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 216 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 16,598, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,771 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 18,369 ஆகும்.
வல்வெட்டித்துறையில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி

வல்வெட்டித்துறை நகரசபைக்கான தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றியீட்டியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 2416 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திக் கூட்டமைப்பு 653 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 93 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது.

வல்வெட்டித்துறை தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 3106, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 230 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 3394 ஆகும்.
நெடுந்தீவு பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமோக வெற்றி

நெடுந்தீவு பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1609 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சி 216 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 83 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது.

நெடுந்தீவு தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 1908, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 102 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 2010 ஆகும்.
tamilmirror


கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பச்சிலைப்பள்ளி மற்றும் கரைச்சி, பூநகரி பிரதேச சபைகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம்
[ சனிக்கிழமை, 23 யூலை 2011, 08:50.53 PM GMT ]
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பச்சிலைப்பள்ளி மற்றும் கரைச்சி, பூநகரி பிரதேச சபைகளிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம்
பச்சிலைப்பள்ளி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 1637 வாக்குகளையும்,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1158 வாக்குகளையும்,
மற்றும் கரைச்சி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19500 வாக்குகளையும்,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 5050 வாக்குகளையும்,
பூநகரி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3818 வாக்குகளையும்,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3517 வாக்குகளையும் கைப்பற்றியுள்ளது

வல்வெட்டித்துறை நகரசபையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது! - அம்பாறையில் இரண்டு பிரதேச சபைகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம்

உத்தியோகபூர்வ ரீதியான முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் வாக்கு எண்ணும் நிலையத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் வல்வெட்டித்துறை நகரசபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிந்திக்கிடைத்த தகவல்களின் பிரகாரம் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட 16 உள்ளுராட்சி சபைகளில் 3 நகரசபைகள் உட்பட 14 சபைகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

வேலணை, நெடுந்தீவு ஆகிய பிரதேச சபைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்னணியில் நிற்பதாக யாழ். தேர்தல் திணைக்கள வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.

யாழ்.மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரினால் தேர்தல் ஆணையாளருக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன எனினும் உத்தியோகபூர்வமான அறிவித்தல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

உத்தியோக பூர்வ அறிவிப்புக்கள் பெரும்பாலும் நாளை காலை தேர்தல் திணைக்களத்தினால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான முடிவுகள் குறித்து அறிய முடியாமலிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எமக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் போட்டியிட்ட கட்சிகளின் நிலைவரம்:

யாழ்ப்பாண மாவட்டம்

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சாவகச்சேரி நகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை, காரைநகர் பிரதேச சபை, வலிகாமம் வடக்கு ஆகிய பிரதேச சபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பும் நெடுந்தீவு பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வல்வெட்டித்துறை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2273 வாக்குகளையும்,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 649 வாக்குகளையும்,

ஐக்கிய தேசியக் கட்சி 93 வாக்குகளையும்

சுயேட்சைக் குழுக்கள் 02 வாக்குகளையும் பெற்றிருக்கின்றன.

246 வாக்குகள் செல்லுபடியற்றவை.

வலி.கிழக்கு தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் பணிகள் நான்கு பிரிவுகளாக இடம்பெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் வாக்கெண்ணும் நிலையம் ஒன்றில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையிலான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

கோப்பாய்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 4390

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1514

ஐக்கிய தேசியக் கட்சி - 39

ஜே.வி.பி - 4

செல்லுபடியற்ற வாக்குகள் - 500

நெடுந்தீவு பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1609 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 216 வாக்குகளைப் பெற்று 1 ஆசனம்

ஐக்கிய தேசியக் கட்சி 83 வாக்குகளை மட்டும் பெற்றது. ஆசனம் எதுவும் இல்லை.

செல்லுபடியற்ற வாக்குகள் 102

முல்லைத்தீவு மாவட்டம்

துணுக்காய் பிரதேச சபை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2198 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்கள்

பிரஜைகள் முன்னணி 847 வாக்குகளைப் பெற்ற 2 ஆசனங்கள்

திருக்கோவில் பிரதேச சபை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு - 6860 வாக்குகள்

பொதுசன ஐக்கிய முன்னணி - 1239 வாக்குகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 497 வாக்குகள்

ஐக்கிய தேசிய கட்சி - 810 வாக்குகள்

உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படாத இத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மொத்தமாகவுள்ள 9 ஆசனங்களில் த.தே.கூட்டமைப்புக்கு 7 ஆசனங்கள் கிடைக்கும்.

காரைதீவு பிரதேச சபை

தமிழ் தேசிய கூட்டமைப்பு - 4292 வாக்குகள்

முஸ்லிம் காங்கிரஸ் - 2359 வாக்குகள்

பொதுசன ஐக்கிய முன்னணி - 1050 வாக்குகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 165 வாக்குகள்

இந்த தேர்தல் முடிவு உத்தியோக பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் மொத்தமாகவுள்ள 5 ஆசனங்களில் த.தே.கூட்டமைப்புக்கு 3 அல்லது 4 ஆசனங்கள் கிடைக்கும் .

தென்னிலங்கை உள்ளுராட்சி சபை தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்….

Published on July 23, 2011-6:02 pm · No Comments
கல்னேவ பிரதேசசபை தேர்தல் முடிவுகள் – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 16350 வாக்குகள் – 08 ஆசனங்கள், ஐக்கிய தேசியக்கட்சி –3061 வாக்குகள்- 01ஆசனங்கள்,
எல்பிட்டிய பிரதேசசபை தேர்தல் முடிவுகள் - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 19954 வாக்குகள் – 10 ஆசனங்கள், ஐக்கிய தேசியக்கட்சி –10427 வாக்குகள்- 04ஆசனங்கள், சுயேச்சைக்குழு 2539 வாக்குகள்- ஒரு ஆசனம்,
பட்டேகம பிரதேச சபை தேர்தல் முடிவுகள்- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 23648 வாக்குகள்- 11 ஆசனங்கள், ஐக்கிய தேசியக்கட்சி 7879 வாக்குகள்- 3 ஆசனங்கள், சுயேச்சைக்குழு 2934 வாக்குகள் ஒரு ஆசனம், லங்காசமசமாசக்கட்சி 2658 வாக்குகள் ஒரு ஆசனம், மக்கள் விடுதலை முன்னணி 984 வாக்குகள் ஒரு ஆசனம
அத்தகல பிரதேசசபை தேர்தல் முடிவுகள் – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 54363 வாக்குகள் – 17 ஆசனங்கள், ஐக்கிய தேசியக்கட்சி –18124 வாக்குகள்- 05ஆசனங்கள், மக்கள் விடுதலை முன்னணி 2493 வாக்குகள்- ஒருஆசனம்
யட்டிநுவர பிரதேசசபை தேர்தல் முடிவுகள் – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 27921 வாக்குகள் – 15 ஆசனங்கள், ஐக்கிய தேசியக்கட்சி –12347 வாக்குகள்- 06ஆசனங்கள், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் 1310 வாக்குகள்- 01 ஆசனம்
ஹரிஸ்பத்துவ பிரதேசசபை தேர்தல் முடிவுகள் – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 19967 வாக்குகள் – 11 ஆசனங்கள், ஐக்கிய தேசியக்கட்சி –13892 வாக்குகள்- 06ஆசனங்கள்
சுயேச்சைக்குழு -1553 வாக்குகள்- 01 ஆசனங்கள், மக்கள் விடுதலை முன்னணி – 822 வாக்குகள் -01ஆசனங்கள்.
அக்குரச பிரதேசசபை தேர்தல் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 19566 வாக்குகள் – 09 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி –5018 வாக்குகள்- 02ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி – 1407 வாக்குகள் -01ஆசனங்கள்
மினுவாங்கொடை நகரசபை தேர்தல் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 3162 வாக்குகள் – 8 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி –1523 வாக்குகள்- 03ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி – 95 வாக்குகள் -0ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் – 48 வாக்குகள்- 0 ஆசனங்கள்
சுயேச்சை குழு – 02 வாக்குகள்- 0 ஆசனங்கள்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி -02வாக்குகள்- 0 ஆசனங்கள்
தங்காலை நகரசபை தேர்தல் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 1988 வாக்குகள் – 7 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி –1002 வாக்குகள்- 2ஆசனங்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி- 75 வாக்குகள் – 0ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி – 06 வாக்குகள் -0ஆசனங்கள்

யாழில் 14சபைகள் த.கூட்டமைப்பிடம் ஒன்று ஈ.பி.டி.பி, கிளிநொச்சி 3சபைகள் த.கூட்டமைப்பு, துணுக்காய் த, கூட்டமைப்பு , அம்பாறையில் இரு சபைகளும் த.கூட்டமைப்பு

Published on July 23, 2011-7:00 pm · 1 Comment
பருத்தித்துறை பிரதேச சபை உத்தியோகபூர்வ முடிவு – இலங்கை தமிழரசுக் கட்சி -8938 வாக்குகள், 07 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3022 வாக்குகள், 2ஆசனங்கள்
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உத்தியோகபூர்வ முடிவு – இலங்கை தமிழரசுக் கட்சி -16763 வாக்குகள், 16 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6635 வாக்குகள், 5ஆசனங்கள்;,
வலிகாமம் தெற்கு பிரதேச சபை உத்தியோகபூர்வ முடிவு – இலங்கை தமிழரசுக் கட்சி -12895 வாக்குகள், 13 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4027 வாக்குகள், 3ஆசனங்கள்;
திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபை உத்தியோகபூர்வ முடிவு – இலங்கை தமிழரசுக் கட்சி -8,986 வாக்குகள், 05 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6353 வாக்குகள், 3ஆசனங்கள்;, ஐக்கிய தேசியக் கட்சி 2,869 வாக்குகள் ஒரு ஆசனம்
காரைதீவு பிரதேசசபை உத்தியோகபூர்வ முடிவு – இலங்கை தமிழரசுக் கட்சி -4284 வாக்குகள், 04 ஆசனங்கள், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் 2364 வாக்குகள் ஒரு ஆசனம், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1134 வாக்குகள், ஆசனம் எதுவும் இல்லை, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 152 வாக்குகள் ஆசனம் எதுவும் இல்லை.
நல்லூர் பிரதேசசபை உத்தியோகபூர்வ முடிவு - இலங்கை தமிழரசுக் கட்சி -10207 வாக்குகள், 10 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2238 வாக்குகள், 02 ஆசனம்,
சாவகச்சேரி நகரசபை உத்தியோகபூர்வ முடிவு – இலங்கை தமிழரசுக் கட்சி -4307 வாக்குகள், 9 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1232 வாக்குகள், 02 ஆசனம்,
பருத்தித்துறை நகரசபை உத்தியோகபூர்வ முடிவு – இலங்கை தமிழரசுக் கட்சி -3263 வாக்குகள், 7 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1107 வாக்குகள், 02 ஆசனம்,
குச்சவெளி பிரதேசசபை தேர்தல் முடிவுகள் – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 8451 வாக்குகள் – 06 ஆசனங்கள், தமிழரசுக்கட்சி 2961 வாக்குகள்- 2 ஆசனங்கள், ஐக்கிய தேசியக்கட்சி –1639 வாக்குகள்- 01ஆசனங்கள்,
வலிகாமம் வடக்கு பிரதேசசபை உத்தியோகபூர்வ முடிவு – இலங்கை தமிழரசுக் கட்சி -12065, வாக்குகள், 15 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4919 வாக்குகள், 06 ஆசனம், ஐக்கிய தேசிய கட்சி 78 வாக்குகள்-
வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை உத்தியோகபூர்வ முடிவு – இலங்கை தமிழரசுக் கட்சி -11954, வாக்குகள், 12 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4428 வாக்குகள், 04 ஆசனம், ஐக்கிய தேசிய கட்சி 216 வாக்குகள்-
துணுக்காய் பிரதேசசபை உத்தியோகபூர்வ முடிவு – இலங்கை தமிழரசுக் கட்சி -2198 வாக்குகள், 07ஆசனங்கள், பிரஜைகள் முன்னணி 847 வாக்குகள், 02 ஆசனம், ஐக்கிய தேசிய கட்சி 21 வாக்குகள்-
திருக்கோவில் பிரதேசசபை உத்தியோகபூர்வ முடிவு - இலங்கை தமிழரசுக் கட்சி -6,865 வாக்குகள், 07ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1,249 வாக்குகள், 01 ஆசனம், ஐக்கிய தேசிய கட்சி 810 வாக்குகள்- 01 ஆசனம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 497 வாக்குகள், ஆசனம் எதுவும் இல்லை.
ஊர்காவற்துறை, காரைதீவு, திருக்கோவில், நல்லூர், சாவகச்சேரி. வல்வெட்டித்துறை தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம், நெடுந்தீவு ஈ.பி.டி.பி வசம்!
யாழ். மாவட்டத்தில் 16 சபைகளில் 14 சபைகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கிறது. ஒரு சபையை ஈ.பி.டி.பியும் ஒரு சபையை ஐக்கிய தேசியக்கட்சியும் கைப்பற்றும் நிலையில் உள்ளன. கிளிநொச்சியில் மூன்று சபைகளையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசசபையையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு, திருக்கோவில் இரு சபைகளையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
திருகோணமலையில் பட்டணமும் சூழலும் பிரதேசசபை தமிழ் தேசியக்கூட்டமைப்பு முன்னணியில் உள்ளது. சேருவெல ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றுள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபை- உத்தியோகபூர்வ முடிவு, தமிழ் தேசிய கூட்டமைப்பு – 2416 வாக்குகள்- 7ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 653 வாக்குகள்- 02 ஆசனங்கள், ஐக்கிய தேசிய கட்சி – 93 வாக்குகள்,
அம்பாறை மாவட்டம் – திருக்கோவில் பிரதேச சபை- தமிழ் தேசிய கூட்டமைப்பு – 6860 வாக்குகள்- 3ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 1239 வாக்குகள்- 01 ஆசனங்கள், ஐக்கிய தேசிய கட்சி – 810 வாக்குகள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – 497 வாக்குகள்,

23 ஜூலை, 2011


தென்னிலங்கை உள்ளுராட்சி சபை தேர்தல் முடிவுகள் ஒரேபார்வையில்….

Published on July 23, 2011-6:02 pm · No Comments
அக்குரச பிரதேசசபை தேர்தல் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 19566 வாக்குகள் – 09 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி –5018 வாக்குகள்- 02ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி – 1407 வாக்குகள் -01ஆசனங்கள்
மினுவாங்கொடை நகரசபை தேர்தல் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 3162 வாக்குகள் – 8 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி –1523 வாக்குகள்- 03ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி – 95 வாக்குகள் -0ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் – 48 வாக்குகள்- 0 ஆசனங்கள்
சுயேச்சை குழு – 02 வாக்குகள்- 0 ஆசனங்கள்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி -02வாக்குகள்- 0 ஆசனங்கள்
தங்காலை நகரசபை தேர்தல் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 1988 வாக்குகள் – 7 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி –1002 வாக்குகள்- 2ஆசனங்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி- 75 வாக்குகள் – 0ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி – 06 வாக்குகள் -0ஆசனங்கள் thinakathir


மினுவாங்கொடை, தலவாக்கலை லிந்துலை நகரசபையை ஐ.ம.சு.மு. கைப்பற்றியது
[ சனிக்கிழமை, 23 யூலை 2011, 03:43.05 PM GMT ]
இன்று நடைபெற்ற 65 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கான தேர்தல் முடிவு முதலாவதாக வெளியாகியுள்ளது.
தலவாக்கலை லிந்துலை நகர சபை
இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1988 ஓட்டங்களைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. 1002 வாக்குகளைப் பெற்று எதிர்க்கட்சி 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
மினுவாங்கொடையில் ஐ.ம.சு.மு.வெற்றி
மினுவாங்கொடை நகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றுள்ளது. அக்கட்சி 3162 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி 1523 வாக்குகளைப் பெற்று (3) ஆசனங்களைப் பெற்றுள்ளது.

வலி.கிழக்கு தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் பணிகள் நான்கு பிரிவுகளாக இடம்பெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் வாக்கெண்ணும் நிலையம் ஒன்றில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையிலான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.
கோப்பாய்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 4390
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1514
ஐக்கிய தேசியக் கட்சி - 39
ஜே.வி.பி - 4
செல்லுபடியற்ற வாக்குகள் - 500
அம்பாறை மாவட்டம் - திருக்கோவில் பிரதேச சபை

தமிழ் தேசி கூட்டமைப்பு - 6860 வாக்குகள்
பொதுசன ஐக்கிய முன்னணி - 1239 வாக்குகள்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 497 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி - 810 வாக்குகள்

இந்த தேர்தல் முடிவு உத்தியோக பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை த.தே.கூட்டமைப்புக்கு7 ஆசனங்கள் கிடைக்கும் மொத்த 9 ஆசனங்கள்.

வடகிழக்கு உ. தேர்தல் ஒரே பார்வையில்-நல்லூர், சாவகச்சேரி. வல்வெட்டித்துறை தமிழ் தேசியக்கூட்டமைப்பிடம்நெடுந்தீவு ஈ.பி.டி.பி வசம்!

Published on July 23, 2011-7:00 pm · No Comments
யாழ். கச்சேரியில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணும் நிலையத்தில் உள்ள எமது செய்தியாளர்களின் தகவல்களின் படி வல்வெட்டித்துறை நகரசபையை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. நெடுந்தீவு பிரதேசசபையில் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. தீவுப்பகுதியைச்சேர்ந்த மூன்று பிரதேச சபைகளை தவிர ஏனைய உள்ளுராட்சி சபைகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றும் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. எனினும் பருத்தித்துறை பிரதேசசபையில் ஈ.பி.டி.பியும் கணிசமான வாக்குகளை பெற்று சமபலத்தில் இருப்பதாக நமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபையை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியிருப்பதாக தெரியவருகிறது. வல்வெட்டித்துறை நகரசபை – தமிழ் தேசியக்கூட்டமைப்பு 2273வாக்குகள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 649 வாக்குகள், ஐக்கிய தேசியக்கட்சி 93 வாக்குகள், சுயேச்சைக்குழு- 02வாக்குகள்- நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 246.

வல்வெட்டித்துறை நகர சபையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது!
[ சனிக்கிழமை, 23 யூலை 2011, 05:09.44 PM GMT ]
உத்தியோகபூர்வ ரீதியான முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் வாக்கு எண்ணும் நிலையத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் வல்வெட்டித்துறை நகரசபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.
எமக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் போட்டியிட்ட கட்சிகளின் நிலைவரம்:
வல்வெட்டித்துறை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2273 வாக்குகளையும்,
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 649 வாக்குகளையும்,
ஐக்கிய தேசியக் கட்சி 93 வாக்குகளையும்
சுயேட்சைக் குழுக்கள் 02 வாக்குகளையும் பெற்றிருக்கின்றன.
246 வாக்குகள் செல்லுபடியற்றவை.
வலி.கிழக்கு தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் பணிகள் நான்கு பிரிவுகளாக இடம்பெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் வாக்கெண்ணும் நிலையம் ஒன்றில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையிலான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.
கோப்பாய்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 4390
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1514
ஐக்கிய தேசியக் கட்சி - 39
ஜே.வி.பி - 4
செல்லுபடியற்ற வாக்குகள் - 500

கிளிநொச்சியில் ஈபிடிபி யினரின் அராஜகம்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் மீது தாக்குதல்
[ சனிக்கிழமை, 23 யூலை 2011, 02:23.08 PM GMT ]
இன்று (23.07.2011) நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல்கள் பெரும்பாலும் அமைதியாக நடைபெற்ற போதிலும் கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இது குறித்த மேலதிக விவரம் வருமாறு:
சுந்தரலிங்கம் லோகேஸ்வரன் (31) என்பவர் கிளிநொச்சி ஆனந்தபுரத்தை வதிவிடமாகக் கொண்டவர். கிளிநொச்சி திருவையாறு மகாவித்தியாலயத்தில் பணியாற்றி வருபவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர்.
இன்று மாலை 4.30மணியளவில் தமது தேர்தல் கடமைகளை முடித்துவிட்டு வரும் வழியில் ஈபிடிபியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன், கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றும் விஜயசேகரம் ஆகிய இருவரும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதன்போது இராணுவப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்ட இருவரும் சேர்ந்து லோகேஸ்வரனின் தலையில் பிஸ்டலை வைத்து மிரட்டியுள்ளனர்.
கடுமையான தாக்குதலுக்குள்ளான லோகேஸ்வரனை கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தும் காயம் பலமாக இருப்பதால் உடனடியாக மேலதிகச் சிகிச்சை அளிக்கவேண்டும் என்று யாழ் போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் கொண்டுசென்றுள்ளனர்.
இதனிடையே நேற்றிரவு கறுப்புச் சீருடையணிந்த சிலர் கிளிநொச்சி மக்களுக்கு மதுப் போத்தல்களைக் கொடுத்து வெற்றிலைக்கு வாக்கு கேட்டுள்ளனர்.
இன்று காலை சீருடையின்றி வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு சாலையோரத்தில் நின்று வாக்குச் சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

கலைஞருடன் அழகிரி பேச்சுவார்த்தை
கோவையில் இன்று திமுக செயற்குழு கூட்டம் மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது. நாளை பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க., தலைவர் கலைஞர் கோவை வந்து ஓட்டலில் தங்கியுள்ளார்.


கூட்டத்தில் கலந்து கொள்ள கோவை வந்த மத்திய அமைச்சர் அழகிரி மதுரை மாவட்ட செயலாளர் மூர்த்தி, தேனி மாவட்ட செயலாளர் மூக்கையா உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன் காலை 11 மணியளவில் கலைஞர் தங்கியுள்ள ஓட்டலுக்கு சென்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டுள்ளார்.

பேச்சுவார்த்தை இன்னமும் தொடர்ந்து நடந்து வருகிறது.


என் அண்ணன் அழகிரிக்கு... : மதுரை போலீஸ்
சோதனையில் சிக்கிய பரபரப்பு கடிதம்

மதுரை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி நில அபகரிப்பு புகாரில் சிக்கியுள்ளார்.
இவரது வீடு- தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை புறநகர் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கின என்று தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த சோதனையில் ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் எஸ்ஸார். கோபி குறிப்பிட்டுள்ளதாக போலீஸ் தரப்பில்,

’’என் உயிராக நினைத்து கொண்டிருக்கும் என் அண்ணன் அழகிரிக்கு... என் குடும்பமே கவுன்சிலர் லீலாவதி கொலையில் சம்பந்தப்படாமலேயே சிக்கியதால் மருதுவையும்,

மாமா முத்துராமலிங்கத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அரசியலுக்கு வந்தேன். அதனால் தான் ஒரு வெறியுடன் தங்களின் கட்டளையை செய்ய முடிந்தது.

அருப்புக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் கடுமையாக உழைத்து வெற்றிபெற செய்தோம். நான் பதவி கேட்கும் போதெல்லாம் நண்பர் சுரேஷ் (பொட்டு சுரேஷ்) “உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு பதவி கொடுத்தாகி விட்டது என்று திரும்ப திரும்ப சொல்வார்.

அப்படி பார்த்தால் தளபதியின் தங்கைக்கு நகராட்சி தலைவர் பதவி, தளபதிக்கு எம்.எல்.ஏ. சீட், மாநகர் மாவட்ட செயலாளர் பதவி, துணைமேயராக இருந்த கவுஸ்பாட்சாவுக்கு எம். எல்.ஏ. சீட் அவர்களெல்லாம் உங்களுக்கு என்ன தியாகம் செய்தார்கள்.

நான் செய்த தியாகத்தில் ஒரு சதவீதமாவது விசுவாசமாக நடந்திருப்பார்களா? நான் கவுன்சிலர் சீட் கேட்டேன். ஆவின் சேர்மன் பதவி கேட்டேன். எதையாவது கொடுத்தீர்களா? எனக்கு மட்டும் பதவியில் அமர ஆசை இருக்காதா? யாரையோ திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் நிறுத்தப்போகிறீர்கள். என்னை ஏன் மறந்தீர்கள்? ’’என்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த கடிதத்தில் பஸ் எரிப்பு, இடைத்தேர்தல் வன்முறை, அக்னி ராஜ், பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் வீடுகளில் நடந்த தாக்குதல், தா. கிருஷ்ணன் கொலை ஆகியவை பற்றி அவர் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயங்கள் மற்றும் அதில் தொடர் புடையவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அழகிரி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

எஸ்ஸார்.கோபி எனக்கு எந்த கடிதமும் எழுதவில்லை. போலீசார் போலியாக ஒரு கடிதத்தை தயார் செய்து அவதூறு பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றார். இதைத்தொடர்ந்து அந்த கடிதம் உண்மையா? என்று கண்டறிய தடயவியல் சோதனைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கலாநிதிமாறன் -தயாநிதிமாறன் : பரபரப்பு புத்தகம்

கே.டி. பிரதர்ஸ் என்ற பெயரில் சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் புத்தகம் வெளியிட்டுள்ளார். அதில் கலாநிதிமாறன்- தயாநிதி மாறன் (கே.டி) ஆகியோர் கடந்த 7 ஆண்டுகளில் மிரட்டல் மற்றும் அரசியல் செல்வாக்கை வைத்து எப்படியெல்லாம் ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து சேர்த்தார்கள் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த அன்பழகன் என்ற பத்திரிகையாளர் கே.டி. பிரதர்ஸ் என்ற பெயரில் சிறிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அவர் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் நெருங்கிய நண்பராக விளங்கி தியாகராஜ செட்டியாரின் பேரன் ஆவார்.

வர்த்தகத்தில் தங்களுக்கு எதிரானவர்களை பணிய வைக்கவும், தொழிலில் இருந்து விரட்டவும், சன் டிவிக்கு அடங்கி கட்டணம் செலுத்தவும் சட்டத்தை எப்படியெல்லாம் வளைத்தார்கள் என்ற விவரத்தை புத்தகத்தை எழுதியவர் தகவல் அறியும் (ஆர்டிஐ) சட்டத்தின் வாயிலாக திரட்டியுள்ளார்.


செல்போன் நிறுவனங்களுக்கு மட்டுமே பூமிக்கு அடியில் ஆப்டிகல் பைர்கேபிள் பதிக்க அனுமதி இருந்த போதிலும் சட்ட விரோதமாக தங்களது செயற்கைகோள் டிவி சேனலுக்காக ஆப்டிக்கல் பைர் கேபிளை எப்படி பதித்தார்கள் என்பதில் தொடங்கி அவர்களது முறைகேடுகள் அடுக்கடுக்காக விவரிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான கேபிள் டிவி கார்ப்பரேஷன் கூட ரெயில்வேயின் பைபர் கேபிளை பயன்படுத்துவதற்காக ரெயில்வே அமைச்சகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 2 கோடி வாடகை செலுத்த வேண்டும். ஆனால் மாறன் சகோதரர்கள் சட்டவிரோதமான இந்த செயலுக்காக ஒரு நயா பைசா கூட செலவழிக்கவில்லை என்று புத்தக ஆசிரியர் கூறியுள்ளார்.

மேலும் இந்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி ஒரே நாளில் நாடு முழுவதும் பரவலாக கார்ப்பரேட் அலுவலகங்களைக் கொண்ட 13 கம்பெனிகளை எப்படி பதிவு செய்து கொண்டார்கள் என்ற தகவலும் வெளியிடப்பட்டு உள்ளது.

தொலைக்காட்சிக்கான சிக்னல்களை மேம்படுத்துவதற்காகவும், புதிய எப்.எம். வானொலி நிலையங்கள் அமைப்பதற்கான உரிமங்களை பெறவும் ஒரே நாளில் ரூ. 50 கோடி செலவழித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரோயகம் இதற்கு முன் நடந்தது இல்லை என்று நூலாசிரியர் மேலும் குறிப்பிடுகிறார்.


நோர்வேயில் ஆளும் கட்சி இளைஞர் முகாமில் துப்பாக்கி சூடு 91பேர் பலி!

Published on July 23, 2011-7:40 am · No Comments
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் தலைமை அமைச்சரின் அலுவலகத்திற்கு அருகில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட சில நிமிட நேரத்தில் ஒஸ்லோவிலிருந்து 50 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள உட்டோயா தீவில் ஆளும் கட்சியின் இளம் உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் புகுந்த ஒரு நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 91பேர் பலியாகியுள்ளனர்.
காவல்துறையினரின் சீருடை அணிந்தவாறு அங்கு வந்த நபர் இயந்திர தன்னியக்க துப்பாக்கியால் கூட்டத்தில் இருந்தவர்களை நோக்கி சாரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார்.
பலர் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிய போது அவர்களை நோக்கியும் அந்நபர் சூடு நடத்தினார். இதனால் 91பேர் கொல்லப்பட்டது மட்டுமன்றி பலர் காயமடைந்துள்ளனர்.
சற்று நேரத்தில் அந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இளைஞர் முகாமுக்கு நோர்வேயின் தலைமை அமைச்சர் வருகை தருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. அவரது வருகை சற்றுத் தாமதமாகியதால் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலிருந்து அவர் தப்பித்துக்கொண்டார். அந்த இளைஞர் முகாமிலிருந்த கட்சி உறுப்பினர்களில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல், தலைமை அமைச்சருக்கு குறிவைக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தலைநகர் ஒஸ்லோவில் தலைமை அமைச்சரின் அலுவலகம் அமைந்திருக்கும் கட்டிடத்தொகுதியில் நேற்று மாலை 3.30மணியளவில் இரு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட சிறிது நேரத்தில் தீவுப்பகுதியில் 80பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
ஒஸ்லோ நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதுடன் 15பேர் காயமடைந்துள்ளனர்.
அன்சார் அல்-ஜிகாத் அல்-அலாமி என்ற முஸ்லீம் தீவிரவாத அமைப்பு குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படைகளில் நோர்வேயும் இணைந்திருப்பதாலேயே, இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அந்த முஸ்லீம் பயங்கரவாத இயக்கம் அறிவித்துள்ளது.


இன்று நடைபெறும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் முதலாவது தேர்தல் முடிவுகள் இன்று இரவு 10.00 மணிக்கு வெளியாகும்
[ சனிக்கிழமை, 23 யூலை 2011, 08:44.04 AM GMT ]
தேர்தல் நடத்தப்படாது ஒத்தி வைக்கப்பட்டிருந்த 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப் பதிவுகள் ஆரம்பமாகி பிற்பகல் நான்கு மணி வரை இடம்பெறுகின்றன.
ஒரு மாநகர சபை, ஒன்பது நகர சபைகள், 55 பிரதேச சபைகளுக்கே இன்று தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
தேர்தல்களுக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள் ளப்பட்டுள்ளன. நேரகாலத் தோடு வாக்குச் சாவடி களுக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணை யாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய வேண் டுகோள் விடுத்துள்ளார்.
65 உள்ளூராட்சி சபைகளிலும் நடைபெறும் தேர்தலில் 26 இலட்சத்து 30 ஆயிரத்து 985 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். இதன் மூலம் 875 உறுப்பினர்கள் தெரிவு செய் யப்படவுள்ளனர்.
5619 பேர் இந்த 65 சபைகளிலும் போட்டியிடுகின்றனர். 20 அரசியல் கட்சிகள், 72 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் இவர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
தேர்தல் நடைபெறும் பிரதேசங் களிலுள்ள சகல மக்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக 2,226 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை 383 நிலையங்களில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.
மொத்தமுள்ள 335 உள்ளூராட்சி சபைகளில் 234 சபைகளுக்கு கடந்த ஆண்டு (06.01.2010) தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஏனைய சபைகளுக்கான தேர்தல்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மற்றும் நீதிமன்ற வழக்குகள், கண்ணிவெடி அகற்றப்படாமை ஆகியவற்றால் ஒத்திவைக்கப்பட்டன.
மேற்படி, ஒத்திவைக்கப்பட்ட சபைகளில் 65 உள்ளூராட்சி சபைகளுக்கே இன்று தேர்தல்கள் நடைபெறுகின்றன.
இந்தத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கள் கடந்த 12ம் திகதி நடந்தன. 60 ஆயிரத்து 443 பேர் தபால் மூலம் வாக்களித்துள்ளனர்.
இதேவேளை தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, நீதியும் நேர்மையுமான தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக் கைகளும் மேற்கொள்ளப்பட்டுள் ளதாகவும் மக்கள் காலந்தாழ்த்தாது காலையிலேயே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தேர்தல் நடைபெறும் பிரதேசங்களின் பாதுகாப்பு, தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகள், வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பில் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இன்று நடைபெறும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் முதலாவது தேர்தல் முடிவுகள் இன்று இரவு 10.00 மணிக்கு வெளியாகும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.
அதேவேளை, அனைத்து முடிவுகளும் 24ம் திகதி அதிகாலைக்கு முன்பாக வெளியிடப்படும் எனக் குறிப்பிட்ட அவர், தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இம்முறை தனியாக வெளியிடப்படாது இறுதி முடிவுகளுடனேயே இணைந்து வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், வாக்களிப்பு நிலையங்களுக்குள் புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட அவர், அச்சு மற்றும் இலந்திரனியல் ஊடகங்களில் படங்களோ வீடியோ காட்சிகளோ வெளியாகினால் குறித்த வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரியே அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் மீண்டும் தேர்தல் கடமைகளுக்கு அழைக்கப்படாததுடன் அவருக்கான கொடுப்பனவுகளும் ரத்துச் செய்யப்படுமெனவும் சுட்டிக் காட்டினார்.
தேர்தலில் வாக்களிப்போர் தமது தேசிய அடையாள அட்டை அல்லது தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்துடன் வாக்களிக்க வேண்டுமெனவும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டார்.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் யாழ்ப்பாணத்தில் 201 உறுப்பினர்களும் கொழும்பில் 68 உறுப்பினர்களும் கம்பஹாவில் 34 உறுப்பினர்களும் களுத்துறையில் 11 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
கண்டியில் 55 உறுப்பினர்களும், மாத்தளையில் 23 உறுப்பினர்களும், காலியில் 46 உறுப்பினர்களும், மாத்தறையில் 12 உறுப்பினர்களும், கிளிநொச்சியில் 38 உறுப்பினர்களும், முல்லைத்தீவில் 9 உறுப்பினர்களும், அம்பாறையில் 14 உறுப்பினர்களும், திருகோணமலையில் 38 உறுப்பினர்களும், புத்தளத்தில் 59 உறுப்பினர்களும், அனுராதபுரத்தில் 32 உறுப்பினர்களும், பொலன்னறுவையில் 36 உறுப்பினர்களும், மொனராகலையில் 20 உறுப்பினர்களும், இரத்தினபுரியில் 57 உறுப்பினர்களும், கேகாலையில் 48 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
தேர்தல் கண்காணிப்பு நடவடிக் கைகளில் சர்வதேச கண்காணிப்பு அமைப்புக்கள், பெப்ரல், சி.எம்.சி.வி. போன்ற அமைப்புகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன

22 ஜூலை, 2011


தூயகத்தில் உள்ள உங்கள் உறவுளை
தொடர்புகொண்டு தமிழ்தேசியத்தை எம்மண்ணில்
நிலைநிறுத்த வீட்டிற்கு வாக்களிக்க வேண்டுகோள்விடுங்கள்.
உரிமையோடு கேட்டுநிற்கின்றோம் .இது உங்களால்தான்முடியும்.
உங்களது இரத்த சொந்த பந்தங்களேர்டு வரும் இருபத்திநாலு
மணிநேரத்துக்குள் அவசர தொடர்பை ஏற்படுத்தி இந்த களப்பணியை
நிறைவேற்ற நீங்களும் இறங்கி சிங்கள அரசாங்கத்திற்கு தமிழன்
என்றும் தன்மானம் உள்ளவன் என்பதை முரசறையுங்கள்.
ஆவசரமான எங்கள் அழைப்பிற்கு விரைந்து கைகொடுங்கள்.
-வலிதந்தாரை தோற்கடிப்போம்- எம்
வுpதிவெல்லும் வாக்களிப்போம்-
நன்றி
சிவஞானம் சிறீதரன்
பா.உறுப்பினர்
த.தே.கூட்டமைப்பு
தமிழா சிந்தி -இன்று இல்லையேல் என்றும் இல்லை-இந்த மண் எங்களின் சொந்த மண் -எதிரிக்கு இங்கேது வாக்கு
தீவுப்பகுதி மக்களே! இன்று உங்கள் பொன்னான வாக்குகளை தமிழரசு கட்சி சின்னமான வீட்டுக்கு அளித்து மீண்டும் ஒரு வரலாற்று ப்பதிவை உருவாக்குங்கள் .இது ரகசிய வாக்கெடுப்பு முறை. எந்த ஆயுத வன்முறைக்கும் பணிந்து போகாது அற்ப சலுகைகளுக்கும் ஒட்டுக் குழுக்களின் வெளிநாட்டு அடிவருடிகளின் பசப்பு வார்த்தைகளுக்கும் அவர்களின் துயர்துடைக்கும் உதவி நாடக மயக்கங்களுக்கும் ஒத்துழைக்காது தீவுப்பகுதியின் அரசியல் விடுதலை உணர்வை வெளிபடுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெல்ல வையுங்கள் .சோறா? சுதந்திரமா ? உங்கள் வாக்குகள் தீர்ப்பு எழுதட்டும்.எதரி எதுவும் செய்யட்டும் நீங்கள் ரகசியமாகவே வாக்களிக்க போகின்றீர்கள்.இன்றே துணிக.நன்றே செய்க


நித்திரையில் இருந்த மக்களை மிரட்டி அவர்களது வாக்காளர் அட்டைகள் பறிமுதல்
[ சனிக்கிழமை, 23 யூலை 2011, 03:40.00 AM GMT ]
பச்சிலைப்பள்ளி (பளை) பெரிய தம்பகாமத்தில் இரவு 11 மணியளவில் வீடுகளிற்க்கு சென்ற ஆயுததாரிகள் நித்திரையில் இருந்த மக்களை மிரட்டி அவர்களது வாக்காளர் அட்டைகளை பறித்துச் சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் அவர்களது கையடக்கத் தொலைபேசிகளின் SIM அட்டைகளையும் பறித்து விட்டு வாக்களிக்க செல்ல வேண்டாம் என்றும் கடிமையான தொனியில் மிரட்டப் பட்டுள்ளனர்.

எனினும் அந்த மக்களை உடனடியாக தமது அடையாள அட்டைகளை கொண்டு சென்று நேரம் தாமதிக்காது வாக்களிக்க செல்லுமாறு உங்கள் முகவர்கள் ஊடாக அறிவிக்கவும். புலம்பெயர் உறவுகளுக்கு யாழ் கிளிநொச்சிமண்ணிலிருந்து ஓர் அவசரமான வேண்டுகோள்!

வரும் 23ம் நாள் யாழ் கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும்
தேர்தல்களம் தமிழ்மக்களை பொறுத்தவரையில் சவால்களும்
நெருக்கடிகளும் நிறைந்ததாக திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது.
இராணுவநெருக்குவாரங்களுக்கு மத்தியில் தமிழ் தேசியத்தை
நிலைநிறுத்துவதற்காக இந்த மண்ணில் துணிந்து களம்
இறங்கியுள்ள த.தே.கூட்மைப்பு வேட்பாளர்கள் பற்றுறுதியோடு
தேர்தல் பணியை நிறைவு செய்துள்ள நிலையில் சிறிலங்கா
ஆரசாங்கம் தனது முழுப்பலத்தையும் வளத்தையும் ஒருங்கிணைத்து
யுhழ் கிளிநொச்சி நோக்கி நகர்த்தியுள்ளது.

நாமல்ராஜபக்ச உட்பட பல முக்கிய அமைச்சர்கள்
கிளிநொச்சியில் முகாமிட்டுள்ளனர்.நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர்
யுவதிகள் இங்கே கிராமம் கிராமமாக பிரச்சாரப்பவனி வருகின்றனர்.
ஆரசதரப்பால் த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது மிகமோசமான
மிரட்டல்கள் கடத்தல்கள் எரியுட்டல்கள் என தொடர்ச்சியான வன்முறைகள்
எம் வேட்பானர்கள் மீத கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
போரில் வலிசுமந்து நலிந்துபோயுள்ள எம்மக்கள் மீது அழுத்தங்களை
பிரயோகித்து அற்ப சொற்பசலுகைகளை காட்டி அபிவிருத்தி என்ற
மாய வலை விரித்து எம்மக்களின் வாக்குகளை கபளீகரம் செய்ய
அரசு கங்கணம்கட்டி நிற்கின்றது.
தலைகீழாக நின்றேனும் இந்த தேர்தலில் எமது வாக்குகளை
கொள்ளை அடித்து தன் கழுத்துக்கு வந்து விழுந்துள்ள
போர் குற்ற விசாரணைகளில் இருந்து எப்படியாவது அரசு
தப்பிப்பிழைக்க எத்தணிக்கின்றது.
மக்கள் முன்னர் ஒருபோதும் சந்தித்திராத காட்டுக்கத்தல்கள்
கூச்சல்கள் கூத்து கும்மாளங்கள் கேளிக்கைகள் ஊடான
ஆரசதரப்பு பிரச்சார முனனெடுப்புகளால் மக்கள் பதகளித்து
போயுள்ளனர்.தேர்தல் சட்டவிதிகளுக்கு முரனாக பிரச்சாரப்
புணிகள் நிறைவுற்ற போதும் ஈ.பி.டி.யும் சிங்கள கட்சிகளும்
இப்போதும் பெருமெடுப்பில் பரப்புரை செய்து வருகின்றனர்.
இராணுவத்தின் முழுஒத்துழைப்பும் ஆசியோடும் இங்கு
ஏல்லாமே நடக்கின்றது.
தேர்தல் பணிகளுக்காக முந்நூறுக்கும் மேற்பட்ட
ஆரச உத்தியோகத்தர்கள் இப்போது இங்கே
கொண்டுவரப்பட்டுள்ளனர்.
அன்பான எம் புலம்பெயர் உறவுகளே!
நாம் இன்று ஒரு நெருக்கடியான அரசியல்
களத்தை எதிர்கொண்டு நிற்கின்றோம்.
ஏம்மக்களுக்கான நீதியையும் எதிர்கால
வுhழ்வையும் தீர்மானிக்கின்ற தேர்தல்
களமிது.
தூயகத்தில் உள்ள உங்கள் உறவுளை
தொடர்புகொண்டு தமிழ்தேசியத்தை எம்மண்ணில்
நிலைநிறுத்த வீட்டிற்கு வாக்களிக்க வேண்டுகோள்விடுங்கள்.
உரிமையோடு கேட்டுநிற்கின்றோம் .இது உங்களால்தான்முடியும்.
உங்களது இரத்த சொந்த பந்தங்களேர்டு வரும் இருபத்திநாலு
மணிநேரத்துக்குள் அவசர தொடர்பை ஏற்படுத்தி இந்த களப்பணியை
நிறைவேற்ற நீங்களும் இறங்கி சிங்கள அரசாங்கத்திற்கு தமிழன்
என்றும் தன்மானம் உள்ளவன் என்பதை முரசறையுங்கள்.
ஆவசரமான எங்கள் அழைப்பிற்கு விரைந்து கைகொடுங்கள்.
-வலிதந்தாரை தோற்கடிப்போம்- எம்
வுpதிவெல்லும் வாக்களிப்போம்-
நன்றி
சிவஞானம் சிறீதரன்
பா.உறுப்பினர்
த.தே.கூட்டமைப்பு

பேரினவாதிகளுக்கு யாழ்ப்பாண புனித மண்ணில் இடம்கொடுக்க கூடாது: அரியநேத்திரன் _

Share
'அகிம்சைப்போராட்ட தலைமைகளையும், ஆயுதப் போராட்ட தலைமைகளையும் தமிழினத்திற்கு தந்த யாழ்ப்பாண புனித மண்ணில் பேரினவாதிகளுக்கு இடம்கொடுக்க கூடாது என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சுன்னாகம் சந்தியில் மாலை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

'அகிம்சைப்போராட்ட தலைமைகளையும், ஆயுதப் போராட்ட தலைமைகளையும் தமிழினத்திற்கு தந்த யாழ்ப்பாண புனித மண்ணில் பேரினவாதிகளுக்கு இடம்கொடுக்க கூடாது. பேரினவாதிகளுக்கு வாக்களித்து வெட்ககேடான காரியத்தை யாழ் மக்கள் செய்யக்கூடாது .

2010ஆம் ஆண்டு நடைபெற்ற கடந்த பொதுத்தேர்தலில் வன்னியிலோ கிழக்கு மாகாணத்திலோ தமிழ் மக்கள் பேரினவாத கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு வாக்களிக்கவில்லை.

அவர்கள் தமிழ் தேசியத்தில் பற்றுறுதியோடு தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கே வாக்களித்தார்கள். ஆனால் அகிம்சை போராட்ட தலைமைகளும் ஆயுதப்போராட்ட தலைமைகளும் உருவான யாழ்ப்பாணத்தில் கடந்த பொதுத்தேர்தலில் சிங்கள பேரினவாத கட்சியை சேர்ந்த நான்கு பேரை யாழ்ப்பாண மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள்.

இது அனைவரும் வெட்கி தலைகுனிய வேண்டிய காரியம். இத்தகைய வெட்ககேடான அவமானத்திற்குரிய காரியத்தை இனிமேல் யாழ்ப்பாண மக்கள் செய்யக்கூடாது. முள்ளிவாய்க்​காலில் கொல்லப்பட்ட எமது உறவுகளின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமாக இருந்தால் கொலையாளிகள் யாழ்ப்பாணத்தில் தோற்கடிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இன்று சர்வதேசம் இலங்கை அரசு மீது போர்க் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இதிலிருந்து தப்புவதற்காகவே தமிழ் மக்களின் வாக்குகளை ஆளும் கட்சி கோரி நிற்கிறது. தமிழ் மக்களின் வாக்குகள் கிடைத்தால் சர்வதேசம் சுமத்தியிருக்கும் போர்க்குற்றச்சாட்டிலிருந்தது தப்பி விடலாம் என அரசாங்கம் எண்ணுகிறது. இதற்காகவே அரசுத்தலைவர் ஜனாதிபதி மகிந்த ராசபக்ச உட்பட அமைச்சர்கள் அனைவரும் யாழ்ப்பாண மண்ணில் முகாம் இட்டுள்ளார்கள் என்றும் அரியநேத்திரன் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், அ.விநாயகமூர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, சீ.யோகேஸ்வரன், மேலக மக்கள் முன்னணித்தலைவர் மனோ கணேசன் உட்பட பலரும் உரையாற்றினர்.இதனைத் தொடர்ந்து சாவகச்சேரி நகரிலும் இரவு பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. ___ E-mail to a friend
வலம்புரி பத்திரிகையின் குத்துக்கரணம் .துரோகிகளுக்கு வழி விடுகிறதா -அதன் பார்வையில் தேர்தல்
நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-07-22 15:10:16| யாழ்ப்பாணம்]
விடிந்தால் உள்ளூராட்சி சபைத் தேர்தல். தேர்தலுக்கான பிரசாரங்கள் ஓய்ந்துவிட்டன. பொதுநிலையில் நிற்போர், எல்லோரும் வாக்களியுங்கள் என்ற கோரிக்கையையும் தேர்தல் சுமுகமாக நடந்தேற வேண்டும் என்ற ஆசீர்வாதத்தையும் சமயோசிதமாகக் கூறி தேர்தல் பற்றிய தங்கள் கருத்தை நிறைவுசெய்து கொண்டுள்ளனர்.

தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்துக்கொள்வதற்கான வழியாக அவர்கள் இதைக் கருதியிருக்கலாம். அதில் நியாயமும் இருக்கவே செய்கிறது.

அதேநேரம் ஊடகங்கள் தத்தம் கருத்துக்களை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் எடுத்துக்கூறியுள்ளன. அத்தகைய கருத்துகளுக்குள் சார்புநிலையும் உண்டு என்பதை மறுக்க முடியாது. ஊடகங்கள் எந்தெந்தப் பக்கம் சார்ந்தவையோ அவை தத்தம் சார்பு நிலைக்கேற்ப கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. அவைபற்றியெல்லாம் நாம் இங்கு எதுவும் பிரஸ்தாபிக்க விரும்பவில்லை.

ஆனால் ஊடகங்கள் எப்போதும் நடுநிலை சார்ந்து நிற்பதே பொருத்தமுடையதும் ஏற்புடையதும் ஆகும். ஏனெனில், இலங்கையில் இனவாதத் தீயை எண்ணெய் ஊற்றி வளர்ப்பதில் பெரும்பாலான ஊடகங்கள் கணிசமான பங்கை ஆற்றியுள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை. இதன்காரணமாகவே சர்வதேச தொண்டு நிறுவனமொன்றின் அறிக்கையில், இலங்கையில் ஊடகப்பயங்கரவாதம் நிலவுகின்றது என்ற கருத்து இடம்பெற்றுள்ளது.

உலகமக்களின் பல்கலைக்கழகமாக விளங்குவது பத்திரிகைகளே என்ற ஒரு அறிஞனின் கருத்தியலோடு இதை ஒப்பிடுமிடத்து ஊடகங்கள் பயங்கரவாத சிந்தனையைத் தோற்றுவிக்குமாக இருந்தால், அதைவிடப் பயங்கரம் எதுவுமாக இருக்கமுடியாது. எனினும் இலங்கையில் துரதிர்ஷ்டவசமாக ஊடகப்பயங்கரவாதம் நிலவி வருகின்றது. இஃது இனப்பிரச்சினையின் துன்பநிலை தொடர்வதில் கணிசமான பங்கைக் கொண்டுள்ளது எனலாம்.

எதுவாயினும் கடந்த சில, தினங்களாக வலம்புரி அலுவலகத்துடன் தொலைபேசியில் தொடர்புகொள்ளும் மரியாதைக்குரிய வாசகர்கள் உள்ளூராட்சித் தேர்தலில் வலம்புரியின் நிலைப்பாடு என்ன? இதுவரை தேர்தல் குறித்து வலம்புரி மெளனம் சாதிப்பது போன்ற தோற்றப்பாடு தெரிகின்றது. எனவே வலம்புரி தனது கருத்தைக் கூற வேண்டும் என அன்புக்கட்டளை இட்டவண்ணம் உள்ளனர்.

தேர்தலைப் பொறுத்தவரை யாருக்கு வாக்களிப்பது என்ற முடிபை வாக்காளர்களே தீர்மானிக்க வேண்டும் என்ற கருத்தில் வலம்புரி மிகவும் உறுதியாக இருக்கிறது. இதனையே வலியுறுத்தவும் விரும்புகின்றது அவ்வளவுதான்.-வலம்புரி




ரஞ்சிதாவுடன் அந்தரத்தில் இன்பம் காண முயன்ற நித்தியானந்தாவின் முயற்சி தோல்வி ( காணொளி இணைப்பு )
நடிகை ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைப்பார் என்று இந்தியாவில் பங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்தில் சுவாமி நித்தியானந்தா நடத்திக் காட்டிய வித்தை கடந்த 15 ஆம் திகதி படுதோல்வி அடைந்தது. வெளிநாட்டு சீடர்கள் உட்பட அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். மக்களை ஏமாற்றுகின்றார் நித்தியானந்தா என்று ஊடகவியலாளர் ஒருவர் ஆவேசமாக கூச்சல் போட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா நெருக்கமாக இருந்த காட்சிகள் உலகம் முழுவதும் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியானதால் நித்தியானந்தாவின் உண்மையான முகம் மக்களிடம் அம்பலம் ஆகி இருந்தது. நித்தியானந்தா கர்நாடக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்து இருக்கிறார். ரஞ்சிதா அது வரை காலமும் தலை மறைவாகி இருந்தார்.

மக்களிடம் மதிப்பிழந்த நித்தியானந்தா அண்மையில் சென்னை வந்து ரஞ்சிதாவுடன் ஊடகவியலாளர் மாநாடு நடத்தினார்.

செய்தி நிறுவனங்கள் மீது பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டார்.



இவரது ஆசிரமத்தில் கடந்த 15 ஆம் திகதி குரு பூர்ணிமா பூஜை நடந்தது. வெகு விமரிசையாக கொண்டாடினார் நித்தியானந்தா. ரஞ்சிதா உட்பட ஏராளமான பக்தர்கள், வெளிநாட்டு சீடர்கள் அவரை சுற்றி அமர்ந்து இருந்தனர். ஒரு வித்தை புரியப் போகின்றார் என்று அப்போது நித்தியானந்தா அறிவித்தார்.

குண்டலினி சக்தி மூலம் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக பக்தர்களை அந்தரத்தில் மிதக்க வைக்க போகிறார் என்றார். அந்தரத்தில் மிதக்கின்றமை சிறிய விடயம், வெற்றுக் காசோலை கொடுத்து ஏழையை பணக்காரனாக்குகின்றமை போன்றதுதான் அது, குண்டலினியில் ஈடுபட்டு இச்சக்தியை பக்தர்கள் அடைகின்றமைக்குள் வயதாகி விடும்.



அதனால் பக்தர்களின் குண்டலினி சக்தியை உடனடியாக எழுப்பிக் காட்டப் போகின்றார் என்றார். சவால் விடும் தோரணையில் அறிவித்தார். இதை அடுத்து ரஞ்சிதா உட்பட பக்தர்கள் அனைவரும் அந்தரத்தில் மிதக்க தயாராயினர்.

சிம்மாசனத்தில் அமர்ந்து கையில் வாள், கேடயம் போன்றவற்றை வைத்துக் கொண்டு நித்தியானந்தா ஏதோ மந்திரம் முணுமுணுத்தார். பிறகு வாயை குவித்து காற்றை ஊதினார். நடக்கட்டும் என்பது போல் கைகளை அசைத்தார். எல்லோரையும் குதிக்க சொன்னார். குதித்து கொண்டே இருக்கின்றபோது ஒரு கட்டத்தில் சர்ரென மேலே எழும்பி அந்தரத்தில் மிதக்கலாம் என்றார்.

இதை அடுத்து எல்லோரும் சப்பாணி கொட்டி உட்கார்ந்தபடியே குதிக்க தொடங்கினர். விநோத ஒலிகளை எழுப்பிய வண்ணம் குதித்தனர். இக்காட்சி ஒரே நேரத்தில் ஏராளமான தவளைகள் தாவி குதிப்பதை போலிருந்தது.

எங்கே அந்தரத்தில் பறந்து போய் கீழே விழுந்தால் அடிபட்டு விடுமோ? என்கிற அச்சத்தில் சிலர் தலைக் கவசம் அணிந்து இருந்தனர்.


அதிசயம் பேசும் அரசு
தமிழனை அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்ற மனோபாவம் சிங்கள அரசுக்கு இருக்கும் வரையில் தீர்வும் இல்லை. இந்த நிலையில், தமிழனுக்கு இத்தனை அநியாயங்களையும் அக்கிரமங்களையும் செய்த பின்பும் படு பாதகமான இழிசெயலை செய்த பின்பும் ஒரு தமிழ் மகனுக்கும் ஒரு சிறுகாயம் கூட ஏற்படாமல் பயங்கரவாதத்தை ஒழித்திருக்கிறோம் என்று உலக அதிசயம் பேசுகிறார்கள். பெற்றோரை இழந்த பிள்ளைகள் எத்தனை?, பிள்ளைகளை இழந்த பெற்றோர் எத்தனை?, கணவனை இழந்த விதவைகள் எத்தனை?, மனைவியை இழந்த கணவன்மார் எத்தனை?, எத்தனை குடுப்பங்கள் பூண்டோடு அழிந்தன?. எண்ணிக்கை பார்க்க மறுக்கிறது அரசு; அதனால் நீங்கள் எண்ணிப் பாருங்கள்.
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக எந்தவித விசாரணையும் இன்றி சிறையில் வாடும் இளைஞர்கள், யுவதிகள் தமது இளமைக் காலத்தையே பாறிகொடுத்து வாடுகின்றார்கள். தமது பிள்ளைகளை இன்று விடுவார்கள்; நாளை விடுவார்கள் என்று பெற்றோர்களும், தமது கணவன்மாரை எப்பொழுது விடுவார்கள் என்ற ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் மனைவிமாரும் கண்ணீருடன் வாழும் வாழ்வு நிலை சொல்லில் அடங்காது. இத்தனை அக்கிரமங்களை செய்யும் அரசுக் கும் அரசின் அமைச்சர்களுக்கும் தன் மானத்தை இழந்த எம்மவர்கள் சிலர் கோடா ரிக்காம்புகளாக நின்று அவர்களுக்குக் குடை, கொடி, ஆலவட்டம் பிடிக்கின்றார்கள்.
தமிழன் தன் சொந்த மண்ணிலேயே இராணுவ நெருக்குவாரங்களுக்குள் சிக்கித் தவிக்கின் றான். முழத்துக்கு முழம் திரும்பிய திசையெல்லாம் பாதுகாப்புப் படையினர். இத் தனைக்கும் மத்தியில் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவுகள். இந்த நிலையில் வடக்கின் வசந்தம் என்றும் நிம்மதியான வாழ்வு என்றும் பசப்பு வார்த்தை காட்டி தெருவீதி யில் வலம் வருகின்றார்கள்.
எதற்கு இந்த ஆரவாரம்?
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இல்லாத முக்கியம் ஏன் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர் தலுக்கு? காரணத்தோடுதான் காய்நகர்த்து கின்றார்கள். ஐ.நாவின் நிபுணர்குழு அறிக்கையும், சனல்4 தொலைக்காட்சியின் ஸ்ரீலங்காவின் கொலைக்களமும் இலங்கை அரசை கிலி கொள்ள வைத்திருக்கின்றன. சர்வதேசமும் இலங்கை அரசை நோக்கி கை நீட்டுகின்றது.போர்க் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு தமிழ் மக்களின் உதவி இந்த அரசுக்குத் தேவை. அதனால்தான் உள்ளூராட் சித் தேர்தலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதற்காக அத்தனை அமைச்சர்களும் யாழ்ப்பாணத்தில் முகாமிடுகின்றனர்.இந்தவேளையில் நாம் இன்னொரு விடயத் தையும் புரிந்து கொள்ளவேண்டும். இலங்கைத்தீவின் சகல சிங்களக்கட்சிக ளும் தமிழனின் உரிமையை பறிப்பதில் போட்டு போட்டுக்கொண்டு செயல்பட்டன; செயல்படுகின்றன.
"புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள் இனித் தீர்வுத் திட்டமே தேவையில்லை'' என்று தமி ழர்களை அலட்சியப்படுத்தியவர் ஐ.தே.கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க. சட்டிகள் வெவ்வேறானாலும் கள் ஒன்றுதான்.
எமது மண் மீட்கப்படவேண்டுமானால், இராணுவ நெருக்குவார மின்றி நாம் வாழ வேண்டுமானால், எமது இளைஞர், யுவதிகள் ஒழுக்க நெறியோடு வாழவேண்டுமானால் எமது சந்ததி காப்பாற்றப்பட வேண்டுமானால் "மானமுள்ள தமிழனே மனம்விட்டுச் சிந்தி, மறு பேச்சில்லாமல் தமிழன் வாழ வாக்குக்குடு''uthayan