புதன், 15 ஜூன், 2011


சிறீலங்கா அகதிகள் நாடுகடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது

சிறீலங்காவில் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுவருதாக சனல் போஃர் நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளபோதும், பிரித்தானியாவில் அகதித்தஞ்சம் கோரியவர்களில் ஒரு தொகுதியினர் நாடுகடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த ரெலிகிராஃப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறீலங்கா பாதுகாப்பானது அல்ல என மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துவரும்போதும், பிரித்தானியாவில் அகதித் தஞ்சம் கோரியவர்களில் 40 பேர் நாடுகடத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறீலங்காவில் மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சனல் போஃர் தொலைக்காட்சி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது.
ஆனால் தமிழர்களை நாளை (16) நாடுகடத்துவதற்கு பிரித்தானியா அரசு திட்டமிட்டுள்ளது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.thxx.telegraph



அனுஷ்கா - நாகார்ஜூனா மகன் திருமண நிச்சயதார்த்தம்?


நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்தவர் நடிகர் நாகார்ஜூனா. அவரது மகன் நாக சைதன்யாவும் நடிகையை காதலித்து திருமணம் செய்யவுள்ளார்.

நடிகை அனுஷ்காவை நிஜ வாழ்க்கை ஜோடியாக்கப் போகிறார் நாக சைதன்யா. கடந்த வாரத்தில் இவருக்கும் - அனுஷ்காவுக்கும் நிச்சயதார்த்தமே நடந்து முடிந்துவிட்டதாக கிசுகிசுக்கிறார்கள்.


அமலா முன்னணி நடிகையாக இருக்கும் போதுதான் நாகார்ஜுனா அவரை திருமணம் செய்து கொண்டார். அதே மாதிரி அனுஷ்கா முன்னணி நடிகையாக இருக்கும் போதே அவரை நாக சைதன்யா நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 thx-nakkeran

யாழில் இளவயது கருக்கலைப்புகள் அதிகரிப்பு!


யாழ். மாவட்டத்தில் சட்டவிரோத இளவயது கருக்கலைப்புகள் அதிகரித்து வருகின்றது என்று யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். இதில் பிரபல பாடசாலை மாணவிகளும் உள்ளடங்குகின்றனர் என்றும் அவர் கூறினார்.
யாழ். மாவட்டத்தின் கலாச்சாரப் பிறழ்வும், சமூகச் சீரழிவுச் செய்பாடுகளும் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொண்டாலும், மனச்சாட்சிக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.
இளம் பெண் பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். அத்துடன், இளவயது பெண் பிள்ளைகள் விடயத்தில் கூடிய அக்கறை எடுத்து அவர்களின் படிப்பு, பாதுகாப்பு இரண்டு விடயங்களில் பெற்றோர் கண்டிப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.saritham

ஜெயலலிதாவுடன் ரஜினி தொலைபேசியில் பேச்சு!



சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர்  ரஜினிகாந்த், டிஸ்சார்ஜ் ஆனார்.
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனாலும், தொடர்ச்சியான பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளுக்காக தொடர்ந்து சிங்கப்பூரிலேயே ஒரு நவீன அபார்ட்மெண்டில் தங்கியுள்ளார். இந்த அபார்ட்மெண்ட் மிகுந்த பாதுகாப்பு மற்றும் சகல வசதிகளும் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ரஜினிகாந்த் சிங்கப்பூரில் இருந்து முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் 15.06.2011 அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது ரஜினிகாந்த், தான் தற்போது சிங்கப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, டிஸ்சார்ஜ் ஆகி வந்தவுடன் முதல் அமைச்சருடன் பேச முடிவு செய்து, தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் இன்னும் ஒன்றரை மாதங்களில் இந்தியா திரும்ப இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ரஜினிகாந்தின் குரலை தொலைபேசியில் கேட்டதும் மகிழ்ச்சியடைந்த ஜெயலலிதா, அவர் குணமடைந்தது குறித்து மகிழ்ச்சியைத் பகிர்ந்து கொள்வதாகவும், விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.thx-saritham

போர்க்குற்றம் தொடர்பில் அல்சீரா ஊடகவியலாளரிடம் சிக்கி தவித்த அரசின் ஆலோசகர்
[ புதன்கிழமை, 15 யூன் 2011, 06:17.16 PM GMT ]
பிரித்தானியாவின் செனல் 4 ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆவணப் படம் போலியானது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
வேண்டுமென்றே பொதுமக்களை படுகொலை செய்வது போன்ற காட்சிகள் குறித்த ஆவணப்படத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எந்தவிதமான உறுதிப்படுத்தல்களும் இன்றி குறித்த வீடியோ காட்சிகளை செனல்4 ஊடகம் வெளியிட்டுள்ளமை வருத்தமளிப்பதாக லண்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான வீடியோ காட்சிகள் இலங்கை வாழ் பல்லின மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில சர்வதேச ஊடகங்கள் வேண்டுமென்றே ஒரு சிலரைத் திருப்திபடுத்தும் நோக்கில் இவ்வாறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வெளியே வாழும் பிரிவினைவாத சக்திகளின் ஆதரவுடன் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இன்நிலையில் இன்று வெளியான சனல் 4 கணொளி தொடர்பில் ஊடகவியலாளரின் காரசாரமான கேள்விகளுக்கு இலங்கை மனித உரிமைகளின் செயலாளர் ராஐீவ் விஐயசிங்க விழிகள் இரண்டும் பிதுங்க தண்டு தடுமாறி பதிலளித்துள்ளார்.


இந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டாம்: விமல், சம்பிக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்து
[ புதன்கிழமை, 15 யூன் 2011, 04:45.42 PM GMT ]
இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாட்டினதும் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டாமென அமைச்சர்கள் விமல் வீரவங்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
13வது அரசியல் அமைப்பு திருத்ததில் வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.
ஆயினும் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவங்ச ஆகியோரின் அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி தனது தீர்மானத்தை மாற்றிக்கொண்டதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்த போது இந்த அமைச்சர்கள் இருவரும் நாடாளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலக்திற்கு சென்று சில மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் போது இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிப்பணிந்து தீர்மானங்களை எடுத்தால் ஜனாதிபதியுடன் கைகோர்த்துள்ள தேசப்பற்றுள்ள சக்திகள் விலகிச் செல்லக் கூடும் எனவும் ஜனாதிபதி தனிமைப்படுத்தப்படலாம் எனவும் கூறியுள்ளனர்.
இந்தியாவும் மேற்குலக நாடுகளும் அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி செய்து வரும் நிலையில் அவர்களின் அழுத்தங்களுக்கு கீழ்ப்படிந்து செயற்படுவதானது தனிப்பட்ட ரீதியில் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பானது என கூறியுள்ள அமைச்சர்கள் எவ்வாறான வெளிநாட்டு அழுத்தங்கள் வந்த போதிலும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுத்தது போன்று இந்த சந்தர்ப்பத்திலும் தீர்க்கமான முடிவுகளை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர். 
இந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்துஇ 13வது அரசியல் அமைப்புத் திருத்;தத்தை அமுல்படுத்தினால், அதனால் ஏற்படப்படப் போகும் சாதக பலன்களை  ஜே.வி.பி பெற்றுக்கொள்ளும் எனவும் அமைச்சர்கள் இருவரும் ஜனாதிபதியிடம் தெளிவுப்படுத்தியுள்ளனர்.thanks-tamilwin

ஐ.நா. அறிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பதிலளிக்க வேண்டும்: பிரித்தானிய தொழிற்கட்சி
[ புதன்கிழமை, 15 யூன் 2011, 04:36.45 PM GMT ]
ஐ.நா அறிக்கையில் இலங்கை அரசு மீது முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கவேண்டும் என பிரித்தானிய தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது. 
இலங்கையின் அண்மைய அபிவிருத்திகள் தொடர்பாகவும், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் நவனீதம்பிள்ளை உரையாற்றியது தொடர்பாகவும் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு பிரித்தானிய தொழிற்கட்சியின் நிழல் வெளிவிவகாரச் செயலாளர் டக்ளஸ் அலென்சாண்டர்  குறிப்பிட்டுள்ளார்.  
இறுதிக்கட்டப் போரில் 2000 ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதத்திற்கு இடையிலான காலப்பகுதியில் அரசாங்க படைகளும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என நிபுணர்குழு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மனிதஉரிமை மீறலாக அமைந்துள்ளதுடன் போர்க்குற்றத்திற்கு இட்டுச் செல்லக்கூடியது என்று அறிக்கையில் சில விடயங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு அரசாங்கம் பதிலளிக்கவேண்டும். அதேவேளை அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தின் சொந்த விசாரணை குழுவானது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினது நம்பகத்தன்மை குறித்து பல கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இந்த ஆணைக்குழு அனைத்துலகப் பிரதிநிதிகளையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ஏற்கனவே கால எல்லை நீடிக்கப்பட்டுள்ள இந்த வருடம் நவம்பருக்கு முன்னர் தனது அறிக்கையை வெளியிட வேண்டும்.
இந்த அறிக்கை ஐ.நா நிபுணர்குழு பரிந்துரைத்துள்ள விடயங்களை உள்ளடக்கியதாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். உண்மையான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு நீதி கிடைக்க வழி செய்து, போர்க்குற்றம் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டால் மாத்திரமே இலங்கையில் அமைதியைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் டக்ளஸ் அலென்சாண்டர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்ட கூட்டம் !


பிரித்தானியாவின் நாடாளுமன்ற வளாகத்தில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்ட கூட்டம் ஒன்று நாளை வியாழக்கிழமை (யூன் 16) இடம்பெற இருப்பதாக நா.த.அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம், பிரித்தானியா அரசியல் மட்டத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நா.த.அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கெடுக்கின்றனர்.




தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர்குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் - பிரித்தானியாவில் இருந்து தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுதல் தொடர்பிலான விவகாரம் மற்றும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் நா.த.அரங்சாங்கத்தின் வகிபாகம் ஆகிய விடயங்களை முன்னிறுத்தியதாக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஐநா நிபுணர் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டவாறு, அனைத்துல நீதிவிசாரணை மற்றும் அனைத்துலக பொறிமுறை ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவினையும், இதற்கான அழுத்தம் அரச மட்டத்தில் மேற்கொள்வதற்கு வேண்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

இலக்கு வைக்கப்படும் றெஜி! சிறிலங்கா புலனாய்வுத்துறை தீவீரம்!
[ புதன்கிழமை, 15 யூன் 2011, 02:34.11 PM GMT ]
போர்குற்றங்கள் குறித்தான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் சிறிலங்கா அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் மீது சில போர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஐநா நிபுணர் குழுவின் குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரசு தொடர்சியாக மறுத்து வரும் நிலையில் விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறவும் விசாரணைகளுக்கு தயாரெனவும் தமிழர் புனர்வாழ்வுக்கழக பணிப்பாளர் றெஜி அவர்கள் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
விடுதலைப்புலிகளின் பல மூத்த உறுப்பினர்கள் இறுதிகட்ட யுத்தத்தில் சாவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் எஞ்சியுள்ள மூத்த உறுப்பினர்களில் ஒருவராக றெஜி இருக்கின்றார்.
விடுதலைப்புலிகளின் நிலைப்பாடாக றெஜி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு தெரிவிக்கப்பட்ட இக்கூற்று சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.
ஐ.நாவின் நிபுணர் குழுவின் குற்றச்சாட்டுக்களை தொடர்சியாக நிராகரித்து வரும் சிறிலங்கா அரசுக்கு - விடுதலைப் புலிகளின் இந்த இராஜதந்திர நகர்வு பெரும் நெருக்கடியை சர்வதேச மட்டத்தில் தோற்றுவித்துள்ளதான இராதந்திர அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
குற்றம்சாட்டப்பட்டுள்ள இருதரப்பில் ஓரு தரப்பு விசாரணைகளை சந்திக்க தயார் எனும் நிலைப்பாடு - மறுதரப்புக்கு சங்கடத்தை ஏற்படுத்தை ஏற்படுத்துவது முக்கியமானதொரு சர்வதேச இராதந்திர பொறிமுறை.
இந்நிலையிலயே றெஜியின் இந்த நிலைப்பாட்டை நோக்கி சர்வதேச சமுகம் நகர்வதற்கு முன்னர் - றெஜியை பலவீனப்படுத்துவன் ஊடாக விடுதலைப்புலிகளின் சர்வதேச நிலைப்பாட்டடை பலவீனப்படுத்தலாம் என சிறிலங்கா அரசு செயற்படத் தொடங்கியுள்ளதாக கொழும்பில் இருந்து இயங்கி வரும் ஆங்கில இணைய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை கொழுப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துரைத்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல ' விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை முடக்குவதற்கு சிறிலங்கா தயாராகி வருவதாக தெரவித்துள்ளார்.
றெஜியை பணிப்பாளராக கொண்டு வெளிநாடுகளில் இயங்கி வருகின்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை சிதைப்பதை முதற்பொறிமுறையாக சிறிலங்கா அரசு வகுத்துள்ளது.
ஏற்கனவே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் இயங்கி வருகின்ற புனர்வாழ்வுக் கழகத்தை முடக்க வேண்டிய நிலையை சிறிலங்கா எடுத்துள்ளது.
குறிப்பாக வெளிநாடுகளில் தமிழர்கள் பரந்தளவில் பெருவாரியாக ஒன்றுகூடுகின்ற நிகழ்வுகளில் ஒன்றாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தமிழர் விளையாட்டு விழாவும் ஒன்றாகவுள்ளது.
இந்நிலையிலேயே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் பிரான்சில் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழர் விளையாட்டு விழாவை முடக்குவதற்கு சிறிலங்கா முனைந்து வருகின்றது.
கடந்த இருவாரங்களுக்கு முன்னர் கொழும்புக்கு அவசர அவசரமாக அழைக்கப்பட்ட பிரான்சுக்கான சிறிலங்கா தூதுவரிடம் இதற்கான வேலைத்திட்டத்தை கையளித்துள்ள சிறிலங்காவின் சா்வதேச புலனாய்வுத்துறை - இதற்கு பக்கத்துணையாக சிறிலங்கா கைக்கூலிகளாக இருக்கின்ற சில தமிழர்களையும் இணைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் சேட்டைகள் மற்றும் நிதிமோசடி காரணமாக விடுதலைப் புலிகளினால் தண்டிக்கபட்டு வெளியேற்றபட்ட இரும்பொறை எனும் அரவிந்தன் எனும் நபரே தமிழர்களுக்கான சர்வதேச இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இரும்பொறையின் செயற்பாடுகள் குறித்து விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை உள்ளக அறிக்கையில் எச்சரிக்கை செயற்பாட்டாளர்களுக்கு விடுத்திருந்தது.
பிரான்சில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழர் விளையாட்டு விழாவை முடக்கும் சதி நடவடிக்கைகளின் தொடக்கமாகமாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கே.பியின் வசமாகியிருந்தது எனும் செய்தி சமீபத்தில் திட்டமிட்டு பரப்பப்பட்டிருந்தது.
சிறிலங்கா சர்வதேச புலனாய்வுத் துறையின் திட்டமிட்ட சதிவலைச் செய்தியை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உடனடியாக மறுத்ததுடன் தெளிவான அறிக்கையூடாக மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
சிறிலங்கா அரசின் சதிநடவடிக்கைகளின் தொடர்சியாக விளையாட்டு விழா ஆண்டு தோறும் இடம்பெற்று வருகின்ற மைதான முன்றலை முடக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.
குறித்த மைதானத்தை உள்ளடக்கியதான நகரசபையினைத் தொடர்பு கொண்டு கைக்கூலிகள் 'பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பணம் சேர்க்கவே விளையாட்டு விழா இடம்பெறுவதாக' கதைஅகூறியுள்ளனர்.
யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலங்களில் இத்தகைய செய்பாடுகளை சிறிலங்காத் தூதரகம் முன்னெடுத்துள்ள நிலையில் தற்போது சிறிலங்காவின் கைக்கூலிகளாக தமிழர்கள் ஈடுபவது குறித்து நகரசபை ஆச்சரியம் கொண்டுள்ளது.
இந்தச் சதிவலை வேலைத்திட்டங்களை முடியடிக்கும் நோக்கில் நீண்டகாலமாக விடுதலைக்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றவர்கள் தமிழர் விளையாட்டு விழாவை திறம்பட நடாத்துவதற்கு தயாராகி வருவதாக பாரிஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரான்சுக்கான சிறிலங்காத் தூதுவர் தயான் ஜெயதிலக மற்றும் இரும்பொறை ஆகியோரின் கூட்டுச் சதி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு உள்ளக அறிக்கை மூலம் செயற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருதாக தமிழர் அமைப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐ.நாவின் நிபுணர் குழுவின் குற்றச்சாட்டுக்களை தொடர்சியாக நிராகரித்து வரும் சிறிலங்கா அரசு - விசாரணைகளுக்கு ஒத்துழைக்க தயார் என அறிவித்துள்ள விடுதலைப் புலிகளின் இராஜதந்திர நிலைப்பாட்டை - அனைத்துல சமூகத்தின் சாதகமாக நோக்குவதற்கு முன்னர் - தமிழர்களை பலவீனப்படுத்த சிறிலங்காவின் செய்திட்டத்துடன் கைக்கூலிகளாக தமிழர்கள் சிலர் மாறியுள்ளமை இன்றைய அவசரமானதும் அபாயகரமானதுமான எச்சரிக்கை எனலாம்.thanks-tamilwin

தமிழகத்தின் மதுரை அகதி முகாமில் இலங்கைத் தமிழ் அகதிகள் அரச அதிகாரியால் அச்சுறுத்தல்
[ புதன்கிழமை, 15 யூன் 2011, 01:01.42 PM GMT ]
தமிழகத்தின் மதுரை கூடல் நகரிலுள்ள அகதி முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் மீது முகாமை கண்காணிக்கும் அதிகாரி அச்சுறுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதாக முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை கூடல் நகரில் அமைந்திருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமில் இருநூறுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள் தங்கியிருக்கின்றனர்.  அந்த முகாமைக் கண்காணிக்கும் தமிழக அரசின் வருவாய் ஆணையாளரால்  தாங்கள் அச்சுறுத்தப்படுவதாக அவர்கள் புகார் செய்துள்ளனர்.
கடந்த 13ம் திகதி மதுரை மாவட்ட ஆட்சியாளரான கலெக்டர் சகாயத்தைச் சந்தித்து அவர்கள் அளித்துள்ள முறைப்பாட்டிலேயே மேற்படி புகார் உள்ளடக்கப்பட்டுள்ளது.
முகாமில் வசிக்கும் பெண்களிடம் பிரஸ்தாப ஆய்வாளர் அத்துமீறி நடந்து கொள்ள முயல்வது மட்டுமன்றி முகாமில் வசிப்போர் சங்கத்தின் தலைவா் மீது பொய்யான வழக்குப் பதிந்து பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
முகாமில் வசிப்போர் வேலைக்குச் சென்றுள்ள நேரத்தில் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளும் அவர், அகதிகள் முகாமில் தங்குவதில்லை என்று கூறி உதவித் தொகையை மறுக்கும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றார் என்றும் அகதிகள் அளித்துள்ள முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகளின் முறைப்பாடு குறித்து உரிய விசாரணைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் சகாயம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் தஞ்சம் மறுக்கப்பட்டவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டால் துன்புறுத்தல்களுக்குள்ளாவர்: சர்வதேச மன்னிப்புச்சபை
[ புதன்கிழமை, 15 யூன் 2011, 12:27.27 PM GMT ]
பிரித்தானியாவில் தஞ்சம் மறுக்கப்பட்டுள்ளவர்களை இலங்கைக்குத் திருப்பியனுப்பும் பட்சத்தில் அவர்கள் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப்படுவர் என்று சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரித்துள்ளது.
பிரித்தானியாவில்  அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட முன்னூறு பேர் நாளைய தினம் விசேட விமானமொன்றின் மூலம்  நாடுகடத்தப்படவுள்ளனர். அவர்களில் நாற்பது இலங்கைத் தமிழ் அகதிகளும் உள்ளடங்குவதாக அறிய முடிகின்றது.
அவ்வாறான நிலையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்தியத்துக்குப் பொறுப்பான சாம் ஷரீபி மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளதாக லண்டன் த டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
புலம் பெயர் நாடுகளில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டவர்கள் இதற்கு முன்பும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதற்கான போதுமான சாட்சியங்கள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ள நாற்பது பேரில் ஐவர் தாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தமை பற்றிய விபரங்களை பிரிட்டன் அரசாங்கம் இலங்கையிடம் கையளித்திருப்பதன் காரணமாக நாடுகடத்தப்படும் பட்சத்தில் தாங்கள் உயிராபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மகளுக்கு சொல்ல வேண்டிய அறிவுரைகளை
மற்றவர்களுக்கு சொல்கிறார் கலைஞர் : EVKS

மகளுக்கு சொல்ல வேண்டிய அறிவுரைகளை மற்றவர்களுக்கு சொல்கிறார் கலைஞர், இந்த கூட நட்புத்தான் மகளை சிறைக்கு அனுப்பியுள்ளது என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்... கலைஞரை விமர்சித்து நேற்று ஈரோட்டில் பேசினார்.
ஈரோடு ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் சார்பில், ஈரோடு ரயில் நிலையத்தில், நடைபெற்ற சேலம் கோட்ட சிறப்பு விளக்க கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,


’’காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி இல்லாவிட்டால், கூண்டோடு உள்ளே போகவேண்டிவரும் என்பதால் தான் கூட்டணி தொடரும் என்று பேசிவருகிறார் கலைஞர்.
  காங்கிரஸ் கட்சி எப்போதும் ஊழலுக்கு துணை போகாது.    கட்சியின் பெரிய தலைவரான கல்மாடி உழல் செய்துவிட்டதாக தெரிந்த உடனே அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டனர்.
கூடா நட்பு உங்களுக்கு லேட்டாகத்தான் தெரிகிறது.    அனால் நான் ஒரு மாதம் முன்பே சவகாச தோஷம் பற்றி பேசிவிட்டேன்.
இலவசம்.. இலவசம்.... என்று பொருளை வழங்காமல் மக்களுக்கு இலவசமாக கல்வியை மட்டும் கொடுக்க வேண்டும்.    அப்போது தான் கல்வித்தரம் உயரும், மனித சக்தி உயரும், மக்கள் வாழ்க்கை தரம் உயரும்’’ என்றார்.


செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகம் இயங்க தடையில்லை: சென்னை ஐகோர்ட்
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகம் இயங்க தடையில்லை என, சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.


சென்னை தலைமைச் செயலகம் சட்டசபையை ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தவிட்டது. மேலும் விசாரணை ஜூன் 15ந் தேதிக்கு தள்ளி வைத்தது.

இந்நிலையில் இவ்வழக்கு 15.06.2011 அன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தலைமைச் செயலகம் ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்படுவதற்கு தடை விதிக்க இயலாது என பொது நல வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சனல் 4 தொலைகாட்சிக்கு நன்றி சொல்லி உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் link in

சனல் 4தொலைகாட்சி தமிழருக்கு செய்து வரும் அளப்பரிய பணியினை இட்டும் ..துணிந்து  சிங்கள அரசை எதிர்த்து தொடராக
தன்னை அர்ப்பணித்து தமிழருக்காக குரல் கொடுத்து வருகின்றது .
எனவே உலகெல்லாம் பரந்து விரிந்து வாழும் தமிழ் மக்களே உங்களால் முடிந்த
பின்னூட்டங்களை நன்றி சொல்லி அனுப்புங்கள் .
நன்றி .
சனல் 4 தொலைகாட்சிக்கு நன்றி  சொல்லி உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் link in
தயவு செய்து இதய பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம் 

அன்பான வாசக உள்ளங்களே .
--------------------------------------------
கீழே உள்ள இந்த கண்ணீர் காவியத்தை உங்களால் முடிந்தவரை குறுஞ்செய்தி இணையங்கள் ,சமூக வலைப்பின்னல்கள் (பேஸ்புக் ,ட்விட்டர்).இன்னும் எல்லா வகையான மின்னியல் ஊடகங்கள் மூலமாக எடுத்து சென்று பரவிட வலி செய்யுங்கள்  இந்த இரத்தம் உறைய வைக்கும் காட்சிகளை வேற்று இனத்தவன் மனசையும் கரைக்கும் வண்ணம் பயன் படுத்துங்கள் .எமக்கு கிடைத்துள்ள இந்தசந்தற்பத்தை நழுவ விட்டு ரஜினி பற்றியும் மானாட மயிலாட பற்றியும் அலட்டி கொள்ளாதீர்கள் .நன்றி 
CHANNEL 4-14.06.2011..11pm

பகுதி சனல்4 வெளியிட்டுள்ள திரைப்படம் 
பகுதி இரண்டு 
சனல்4 வெளியிட்டுள்ள திரைப்படம்
 மூன்று   

“சிறீலங்காவின் கொலைக் களம்” செய்தி ஆவணம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது: பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர்

தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா படையினர் மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பாக சனல் போஃர் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிய செய்தி ஆவணம் தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாகவும், அங்கு இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் தேவை எனவும் பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் அலிஸ்ரர் பேட் இன்று (15) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

நேற்று இரவு ஒளிபரப்பாகிய காணொளிச் செய்தி ஆய்வு மிகவும் வருத்தமான காட்சிகளை கொண்டதாக அமைந்துள்ளது. கண்கள் கட்டப்பட்ட நிலையில் தமிழ் கைதிகளை சிறீலங்கா படையினர் சுட்டுப் படுகொலை செய்யும் காட்சிகள் மனதை வேதைனைப்படுத்தியது என அமைச்சர் பேட் தெரிவித்துள்ளார்.

இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு மேற்கொள்ளாதுவிட்டால், சிறீலங்கா மீது அனைத்துலக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த நாள் முதல், அங்கு இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நாம் கோரிக்கை விடுத்து வருகின்றோம். சிறீலங்கா அரசிடம் இருந்து ஆக்கபூர்மான நடவடிக்கைகளை நாம் எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேசயம், புதிய காணொளி ஆதாரங்களில மேலும் மூன்று தமிழர்களை சிறீலங்கா இராணுவம் கண்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டு படுகொலை செய்வது வெளியிடப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் பெண்.

சிறீலங்கா அரசின் சிங்கள இராணுவ அதிகாரியின் தெளிவான கட்டளையின் அடிப்படையில் மிகவும் திட்டமிட்ட முறையில் இந்த படுகொலைகளை சிங்கள சிப்பாய்கள் மேற்கொள்வது பெரும் அதிர்ச்சி அலைகளை தோற்றுவித்துள்ளது.

சிறீலங்கா இராணுவத்தினரின் இந்த படுகொலை காணொளிகள் உண்மையானவை என ஐ.நாவின் நீதிக்குப்புறம்பான படுகொலைகள் தொடர்பான ஐ.நா அதிகாரி கிறிஸ்தோப் ஹெயின்ஸ் தெரிவித்துள்ளதும் 

கொடு என்கிறது இந்தியா முடியாது என்கிறார் மகிந்த
இராஜதந்திர மோதல் உருவாகும் ஆபத்து



மகிந்தஇந்தியா-இலங்கை13-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைவாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு இந்தியா கொடுத்துவரும் அழுத்தத்திற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ பணிய மறுத்துவருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. 13-வது திருத்தச் சட்டமூலத்திற்கு அமைவாக இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு இந்திய மத்திய அரசு விடுத்த வலியுறுத்தலை, கொழும்பிற்கு வந்திருந்த இந்திய உயர்மட்டக் குழு, ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவிடம் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தது.

எனினும் இந்தியாவின் வலியுறுத்தலுக்கு இணங்க மறுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது எனக் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டால் இலங்கை - இந்திய இராஜதந்திர உறவில் மோதல்கள் ஏற்படலாம் என கொழும்புத் தகவல்களை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. இதேவேளை இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கு இலங்கைக்கு ஆறு மாத காலக்கெடுவை இந்தியா விதித்திருந்தமை தெரிந்ததே.

07th Jun 2011
லயனல் மேசி இந்தியா வருகை; இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

 இந்திய கால்பந்துக்கு ரசிகர்களிடையே வரவேற்பு குறைவு என்றாலும் சர்வதேச கால்பந்துக்கு இந்தியாவில் இருக்கும் வரவேற்பு அபாரமானது.உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தை இந்தியாவில் மட்டும் 7 கோடி ரசிகர்கள் டி.வி.யில் பார்த்து ரசித்தே இதற்கு சான்று. அதே வேளையில் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தையும் இதே அளவு ரசிகர்கள்தான்  உலகம் முழுக்க டி.வி.யில் பார்த்தது குறிப்பிடத்தக்கது.
 நீண்ட காலம் கழித்து இந்திய கால்பந்துக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் இந்திய ரசிகர்களின் அபிமானம் பெற்ற அர்ஜென்டினா கால்பந்து அணி இந்தியா வருகிறது. இரு முறை 'பிபா பல்லான் டி ஆர்' விருதை பெற்ற பார்சிலோனாவின் லயனல் மேசி,ஜேவியர் மச்சரானோ, மான்செஸ்டர் சிட்டியின் கார்லெஸ் டாவெஸ்,ரியல்மாட்ரிட்டின் ஏஞ்சல் டி மரியா,ஹீகுவான் உள்ளிட்ட புகழ்பெற்ற வீரர்கள் இந்திய மண்ணில் முதல் முறையாக விளையாட உள்ளனர்.
 போட்டி நடைபெறும் கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து போட்டியை காண முடியும்.ஆனால் பாதுகாப்பு காரணம் கருதி 70 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.அர்ஜென்டினா& வெனிசூலா அணிகள் கொல்கத்தாவில் மோத உள்ளன என்பதை 'பிபா'அட்டவணை வெளியிட்டவுடன் இந்திய கால்பந்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். கொல்கத்தா,புனே, மும்பை, சென்னை,கொச்சி, கோவா போன்ற நகரங்களில் உள்ள கால்பந்து ரசிகர்கள் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்னமும் டிக்கெட் விற்பனை தொடங்கப்படாவிட்டாலும் எப்போது டிக்கெட் விற்பனை தொடங்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.பெரும்பாலானா ரசிகர்கள் லயனல் மேசியை நேரில் கண்டுவிடவே டிக்கெட் வாங்க ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.அந்தளவுக்கு இந்த பார்சிலோனா நட்சத்திரம் இந்திய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
 போட்டி நடைபெறும் சால்ட்லேக் மைதானம் உலக கால்பந்து மைதானங்களில் 2வது பெரியது.தற்போது ஸ்டேடியத்தில் புணரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.இந்த பணிகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்று மேற்குவங்க விளையாட்டுத்துறை அமைச்சர் மதன் மித்ரா தெரிவித்துள்ளார்.
 

 
Share
மேற்கிந்திய தீவுகள் அபாரமான முதல் வெற்றி: இந்தியா படுதோல்வி
இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 103 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன் மூலம் தனது முதல் வெற்றியை அபார வெற்றியாக பெற்றதுடன் இந்திய அணிக்கு இப் போட்டி படுதோல்வியாக அமைந்தது.

இவ்விரு அணிகள் மோதிய 4ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று நடந்தது.

இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று வழக்கம் போல் மேற்கிந்திய தீவுகள் அணியை முதலில் விளையாட அழைத்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 249 ஓட்டங்களை குவித்தது.

போலார்ட் 72 பந்தில் 70 ஓட்டங்களையும் ( 6 பவுண்டரி, 2 சிக்சர்) தொடக்க வீரர் சிம்மனஸ் 67 ஓட்டங்களையும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். இந்திய அணி தரப்பில் பிரவீண்குமார் 3 விக்கெட்டும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

ஒரு ஓவருக்கு 5 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான நிலையில் இந்திய அணி களம் இறங்கியது. மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமள என்று சரிந்தன. குறிப்பாக சுழற்பந்து வீரர் மார்ட்டின் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினார்கள்.

இந்திய அணி 39 ஓவரில் 146 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகவும் மோசமாக தோற்றது. மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட முதல் தோல்வியாகும். ரோகித் சர்மா அதிகபட்சமாக 39 ஓட்டங்களை எடுத்தார். மார்ட்டின் 4 விக்கெட்டும், ரஸ்சல் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். மார்ட்டின் ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் சின்னங்கள் கந்தரோடையில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிப்பு
news
கந்தரோடையில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் போது 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குடியிருப்பாளர்களின் தொல்லியல் எச்சங்கள் பல மீட்கப்பட்டுள்ளன.
 
யாழ்.பல்கலைக்கழக தொல்லியல் துறையும், இலங்கைத் தொல்லியல் திணைக்களமும் இணைந்தே கந்தரோடையில் கடந்த இரு மாத காலமாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.  அங்கு சுமார் மூன்று மீற்றர் சதுர அடியில் சுமார் 20 அடி ஆழத்துக்கு நிலத்தைத் தோண்டி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு இரண்டு இடங்களில் அங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகள் இடம் பெற்று வருகிறன.
 
யாழ்.பல்கலைக்கழக தொல்லியல்துறை விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், ஊழியர்கள் இந்த அகழ்வாராய்ச்சிப்பணியை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் சில தினங்களில் இந்த அகழ்வாராய்ச்சி பணி நிறைவடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 
 
கடந்த இரண்டு மாதகாலமாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருள்கள் பல சிதைந்தும் சிதையாமலும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
 
1970 ஆம் ஆண்டு பென்சில்வேனியா பல்கலைக்கழகத் தொல்லியல்துறை அறிஞர் விமலவேக்லி கந்தரோடையில் ஆய்வை மேற்கொண்டு அங்கு தொல்லியல் சின்னங்கள் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
அவரது ஆய்வை அடிப்படையாகக் கொண்டே கந்தரோடையில் தற்போது அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.

கட்டுநாயக்க விமான நிலையக் கழிவறைக்குள் பெருந்தொகை வெளிநாட்டு நாணயத் தாள்கள்; சுத்திகரிப்பாளர் கைது
news
 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள கழிவறையொன்றி லிருந்து இலங்கைப் பெறுமதியின்படி சுமார் 71 லட்சம் ரூபா வெளிநாட்டு நாணயத்தாள்கள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக விமான நிலையத்தின் சுத்திகரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என சிரேஷ்ட சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.யூரோ, யென், ஆஸ்திரேலிய டொலர் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் மீட்கப்பட்டன . அதன் இலங்கைப் பெறுமதி சுமார் 71 லட்சம் ரூபாவுக்கும் அதிகம் என்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தனியார் நிறுவனமொன்றின் சுத்திகரிப்புப் பிரிவில் கடமையாற்றும் சந்தேகநபரிடம்  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அந்த அதிகாரி மேலும்  தெரிவித்தார்.                                          




அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள இரு முகாம்களில் தங்கியிருந்த இலங்கை தமிழ் அகதிகள் 24 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகம், கடற்கரையோரத்தை அண்டியுள்ள சோனங்குப்பம் கிராம பகுதியில் உள்ள விருதாச்சளம் மற்று திருச்சிராப்பள்ளி ஆகிய முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிராமவாசிகளால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவிற்கு இயந்திரப் படகு மூலம் செல்வதற்கு, முகவருக்கு 7 இலட்சம் வழங்கியுள்ளதாக விசாரணையின்போது அகதிகள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

கியூ பொலிஸ் பிரிவினர் குறித்த ஆட்கடத்தலுடன் தொடர்புடைய முகவரை கைது செய்வதற்கு கூடலூர் மாவட்டத்தில் விருதாச்சளம் பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக