சனி, 3 மே, 2014

குமுதாவைப் போலவே அவள் தொடர்பிலான கேள்விகளுக்கும் பதிலைத் தேடவேண்டியிருக்கிறது.
வழக்கம்போல ஐ.நாவின் அறிக்கையை நிராகரித்திருக்கும் இலங்கை, பாலியல் குற்றங்களில் சொற்பளவிலான
படையினர் மட்டுமே ஈடுபட்டனர் என்று தெரிவித்திருக்கிறது.
வடக்கில் போரின் போது 5 சம்பவங்களில் 7 படையினரும் போருக்கும் பின்னர் 6 சம்பவங்களில் 10 படையினரும் மாத்திரமே பாலியல் வல்லுவறவுக் குற்றங்களில் ஈடுபட்டனர் என்று ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தெரிவித்துள்ள...ார்.
ஆனால், கடந்த 2 வருடங்களில் மட்டும் படையினரால் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளான வன்புணர்வு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் உட்பட 30க்கும் அதிகமானவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவ ரீதியில் கையாளப்பட்டிருக்கிறார்கள் என்று நான் நம்பகமாக அறிகிறேன். அவர்களில் மூவரை நான் நேரில் சந்தித்தும் பேசியிருக்கிறேன் குமுதா உட்பட.
ஒருவேளை குமுதாவைப் போன்றவர்களைக் கண்டுபிடித்து, உரிய பாதுகாப்பும் கொடுத்தால் மேலும் உண்மைகள் பல வெளிவரக்கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக