ஞாயிறு, 4 மே, 2014

பாடசாலையில் புலிக் கொடிக்கு தடை 
 கனடா நாட்டில் உள்ள பாடசாலை ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை தடை செய்துள்ளது. 

 
குறித்த பாடசாலையின் வருடாந்த கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 
 
அன்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்திற்கு தரம் 12 சேர்ந்த மாணவர் ஒருவர் பாடசாலைக்கு புலிக்கொடியை எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
 
குறித்த பாடசாலையின் அதிபரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை கனடா அரசாங்கம் 2006ஆம் ஆண்டு தீவிரவாத இயக்கமாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக