ஞாயிறு, 4 மே, 2014

மூவாயிரம் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படும் - கல்வி அமைச்சு 
நடப்பாண்டில் மேலும் 3000 இற்கும் மேற்பட்ட ஆசிரிய பயிலுனர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இவர்கள் தேசிய கல்வியற் கல்லுரிகளில் இருந்து நாடளாவிய ரீதியாக தெரிவு செய்யப்படுவார்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தெரிவு செய்யப்படும் ஆசிரியர்கள் கிராமப்புறங்களில் பின்தங்கிய பாடசாலைகளில் பணிக்கமர்த்தப்படுவார்கள் எனவும் இச் செயற்பாடானது கிராமப்புற பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக அமையும் எனவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்ததன தெரிவித்துள்ளார

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக