ஆப்கனில் நிலச்சரிவு - 2,100 பேர் பலி
![](http://nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphoto14/dmk/afghanistan-floods.jpg)
ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவில் சிக்கி 2,100 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்திநிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் பதக்ஷான் மாகாணத்தில் கனமழையை அடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய மலைப்பகுதியில் நிலச்சரிவால் வீடுகள் மணலில் புதைந்தன. மேலும் நிலச்சரிவு எற்படும் அபாயம் உள்ளதால் பாதுகாப்பான இடங்களூக்கு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மணலை அகற்ற நவீன உபகரணங்கள் இல்லாததால் மீட்பு பணி தாமதம் ஆகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக