வெள்ளி, 2 மே, 2014


1000 டிரம்மர்களுடன் சிவமணி - அதிர்ந்தது சென்னை
னது ஆரவாரமான அதிரடி ட்ரம் பீட்டுகளால் வலம் வந்து உலகப் புகழ்ப் பெற்றவர் நம் ட்ரம்ஸ் சிவமணி. உலகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை சேர்ப்பவர் என்றே சொல்லலாம். 

ஆயிரம் படங்களுக்கு மேல் டிரம்ஸ் வாசித்தவர் என்றாலும், அரிமா நம்பி என்ற படத்தில் மென்மையான இசையைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தி, ட்ரம்ஸ் சிவமணி தான் ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்பதையும் நிரூபித்துவிட்டார். 

உலக கின்னஸ் சாதனைக்காக சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 1000 ட்ரம்ஸ் கலைஞர்களுடன் ட்ரம்ஸ் வாசித்தார் சிவமணி. இடைவிடாமல் 11 நிமிடம் வாசித்த அந்த சாதனை நிகழ்ச்சி ‘பாரத் புக் ஆஃப் ரெக்கார்டு’ புத்தகத்தில் இடம்பெறுவதற்காக நீதிபதிகள் சங்கத்தின் தலைவரும் முதன்மை சிறப்பு நீதிபதியுமான வி.ராமமூர்த்தி பார்த்தார்.

ஆர்வத்துடன் ஆயிரம் ட்ரம்மர்கள் கலந்துகொண்டு அதிரவைக்கும் சப்தங்களால் சென்னையை அதிரவைத்தனர். பார்ப்பதற்கும் கேட்பதற்கு ஒரு அதிசயமாகவே காட்சியளித்தது அந்த மைதானம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக