செவ்வாய், 29 ஏப்ரல், 2014

யாழிலிருந்தும் நடனகுழுக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் : கலாசார அமைச்சர் 
பல்வேறு காரணங்களால் அழிக்கப்பட்ட யாழிலுள்ள இந்து கோவில்களின் புனரமைக்க  நிதியுதவி வழங்கப்படும் என கலாசார அமைச்சர் ரீ.பீ.ஏக்கநாயக்க தெரிவித்தார்.


இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற உலக நடன தின நிகழ்வில் உலையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.


இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்றடுத்துவதற்காக உலக நடன தினம்
இலங்கையில் முதற்தடவையாக யாழில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.


நான் இன்று விசேட வேண்டுகோளை அரசாங்க அதிபர் மற்றும் அமைச்சரிடம் முன்வைக்கிறேன். இங்குள்ள பிரதேச செயலகங்களில் கலாசார நிலையங்களை அமைக்க ஆவன செய்து தரவும்.


இதேவேளை எமது அமைச்சு வெளிநாடுகளுக்கு நடன குழுக்களை அனுப்பி வருகிறது. இது வரை மலையகத்திலிருந்தே நடன குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இனி வரும் காலங்களில் யாழ்ப்பாணத்வில் நடன குழுக்கள் தெரிவுசெய்யப்பட்டு அவற்றை வெளிநாட்டுக்;;கு அனுப்ப நான் தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக