புதன், 30 ஏப்ரல், 2014


டந்த ஆறுமாத காலமாகவே தேர்தலுக்காக தயாரான அமைச்சர்கள் தேர்தலுக்கு மூன்று நாட்கள் முன்பு தமிழகம் முழுவதும் ஆடித் தீர்த்து விட்டார்கள். அவர்களில் சில அமைச்சர்களை சென்ற இதழில் பார்த்தோம்.

பல அமைச்சர்களை இந்த இதழில் பார்ப்போம்...

திருவண்ணாமலை முக்கூர் சுப்பிரமணி


திருவண்ணாமலை தொகுதி வாக்காளர்களை கடைசி நேரத்தில் கவனிக்க 3 பெரிய எழுத்துத் தொகை யை, மாஜி மந்திரியான அக்ரி.கிருஷ்ண மூர்த்திக்கு அனுப்பி வைத்தார் முக்கூர். அதை அக்ரி, ஒரு பாலிடெக்னிக்கில் வைத்திருந்துவிட்டு, அதை ஏரியா வாரியாக விநியோகிக்க, ஆட்களை அனுப்பினார். கரன்ஸிக் கட்டுகளுடன் போன டி.என்.25. ஏ.ஏ. 5666 என்ற எண்ணுள்ள ஸ்கார்பியோ காரை, செங்கம் சாலையில் இருக்கும்  முறை யாறு பாலத்தில் வைத்து, கலசப்பாக்கம் டெபுடி தாசில்தார் ரமேஷ் தலைமையிலான பறக்கும் படை மடக்கியது. அதற்குள் மேலதிகாரிகளிடமிருந்து போன்கள் வர, காரில் இருந்த பணத்தில் 94 லட்சத்து 23 ஆயிரத்து 700 ரூபாயை மட்டும் கைப்பற்றிவிட்டு காரிலிருந்தவர்களை விட்டுவிட்டது. 

இலைப் புள்ளிகளிடம் நாம் சீக்ரெட்டாக விசாரித்த போது... 

""அந்தக் கரன்ஸிக் காரில் எங்க வேட்பாளர் வனரோஜா வின் சம்பந்தி மாணிக்கம், போளூரைச் சேர்ந்த ஒரு லாயர், ஒரு உளவுத்துறை அதிகாரி ஆகியோர் இருந்தாங்க. ரமேஷ் குமார் என்ற டிரைவர்தான் ஓட்டினார். பறக்கும் படை, வண்டி யாருதுன்னு தெரியாம மடக்கிடிச்சி.  அந்த கார், கோவிந்தன்ங்கிற எங்கக் கட்சிக்காரருடையது. பண விவகாரத் தில் ஆளும்கட்சிப் பிரமுகர்கள் சிக்கினாங்கன்னு வெளியில தெரிஞ்சா அசிங்கம்னுதான் கார்ல இருந்தவங்களை அதி காரிகள் அனுப்பிட்டாங்க. இன்னொரு விசயம்... கார்ல இருந்த அமௌண்ட் ரொம்ப அதிகம். ஆனா ஒரு கோடி யை மட்டும் கணக்கில் காட் டிட்டு மிச்சமிருந்த அமௌண்டை சத்தமில் லாம கொடுத்துட்டாங்க. எங்க கவர் மெண்ட்ல அரசு அதிகாரிகள் எல்லோரும் எங்களுக்கு தானே சாதகமா இருப் பாங்க''’என்றார்கள் புன்னகை யோடு.

வேலூர் வீரமணி 


""நாம வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தா மட்டும் போதாது. எதிரணி பணம் கொடுக்குறதையும் தடுக்கணும்''’என களமிறங்கினார் வீரமணி. வேலூர் தொகுதியில் தாமரைச் சின்னத்தில் களமிறங்கிய ’புதிய நீதிக்கட்சி’ ஏ.சி சண்முகம்,  வாக்காளர் களை கரன்ஸியால் குஷிப்படுத்தி வருவதை கண்காணிக்கச் சொன்னார். அதன்படி ஒரு தகவல் கிடைக்க, உற்சாகமாக பறக்கும் படைக்குத் தகவலை பாஸ் செய்தார். 

ரெஜினாமேரி தலைமையிலான பறக்கும் படையினர் பரபரப்பானார்கள்.  அணைக்கட்டு ஒன்றிய பா.ம.க. தலைவர் குப்புசாமியின்  ஊனை பள்ளத்தூர் வீட்டை முற்றுகை யிட்டனர்.  குப்புசாமி திகைக்க... கிடுகிடுவென வீட்டுக்குள்  நுழைந்து பூஜை அறையில் இருந்த 54 லட்சத்து 63 ஆயிரம் ரூபாயைக் கைப்பற்றினர்.  வேலூர் கலெக்டர் ராஜேந்திர ரத்னு அந்தப் பணத்தை பார்வையிட்டு வருமான வரித் துறையினரிடம்  ஒப்படைத்து விட்டார். 

அமைச்சரோ, ""‘இந்த அரைகோடியை முடக்கியதன் மூலம், 50 ஆயிரம் ஓட்டை, நாம அந்தப் பக்கம் போகாமத் தடுத்துட்டோம்''’என குஷிப் பட்டுக்கொண்டார். சொந்தத் தொகுதி பறிபோய்விடாமலிருக்க கடைசிவரை போராடிக் கொண்டிருந்தார் அமைச்சர்.

கள்ளக்குறிச்சி மோகன் 


கடைசி மூன்று நாட்களில் தனது வீட்டில் இரவுக் கூட்டம் போட்டு கட்சிப் புள்ளிகளுடன் "எங்கெங்கே நமக்கு வீக்?' என விவாதித்த அமைச்சர் மோகன், பகல் பொழுதுகளில் வீக் ஏரியாவாக அறியப் பட்டவைகளில் விசிட் அடித்து, "பணம் வாக் காளர்களுக்குப் போய்ச் சேர்ந்ததா?' என விசாரித்த படியே இருந்தார். ஒன்றியச் சேர்மன்களான சின்னசேலம் ராஜேந்திரன், கள்ளக்குறிச்சி ராஜசேகர், சங்கராபுரம் அரசு, தியாகதுருகம் ஒ.செ. ஐயப்பா ஆகியோர் மூலம் பற்றாக் குறை ஏரியாக்களுக்கு பணத்தை அனுப்பியபடியே இருந்தார். ரிஷிவந்தியம் கட்சிப் பிரமுகர்களை நம்பாமல், காங்கிரஸில் இருந்து சமீபத்தில் ஐக்கியமான எக்ஸ். எம்.எல்.ஏ. சிவராஜ் மூலம் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கச் செய்தார் மோகன். இதில் ஏரியா இலைப்புள்ளிகளான கதிர் தண்டபாணியும் விநாயகமூர்த்தியும் ஓ.பி. எஸ்.ஸை தொடர்புகொண்டு புகார் வாசிக்க... தலைமைதான் சிவராஜ் மூலம் கொடுக்கச் சொன்னது என ஒரே போடாய் போட்டார் ஓ.பி.எஸ்.

கன்னியாகுமரி பச்சைமால் 


கன்னியாகுமரி மாவட்டத்துக்கு என்ன கணக்கோ தெரியவில்லை, 21 கோடியே 10 லட்சம் ரூபாய் பட்டுவாடாவுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. வந்த பணத்தை பிரித்து அனுப்பிக்கொண்டு இருக்கையில், 22-ஆம் தேதி காலையில் அமைச்சர் பச்சைமாலுக்கு தலைமைக்கழகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ""இதுதான் அம்மாவின் இறுதி எச்சரிக்கை. இரண்டு நாட்களில் ஏதாவது செய்து, ஜான் தங்கத்தை ஜெயிக்க வைக்கணும்? இல்லையானால் எல்லாம் தலைகீழாக மாறிவிடும்''’என்றது அந்தக் குரல். குரலைக் கேட்டு அதிர்ந்துபோன பச்சை, உடனே வண்டியைக் கிளப்பி, கத்தோலிக்க ஆயர் பீட்டர் ரெமுஜியுசிடம் அடைக்கலம் கேட்பது போல நின்றார். கலங்கியவராக தன் நிலைமையை எடுத்துச்சொன்னவர், மறை மாவட்டம் சார்பில் மருத்துவக் கல்லூரி அமைக்க அனுமதி வாங்கித் தருவ தாக உறுதியளித்தார். மறுமொழி கூறிய ஆயர், “""நம்பிக்கையோடு இருங் கள்''’என்ற பிறகே, பச்சைக்கு முகத்தில் சிரிப்புக் களை வந்தது.  ஆனாலும், அமைச்சருக்கு நம்பிக்கை இல்லை போலும். ஆயர் இல்லத்துக்கு வேறு கட்சியினர் யாரும் வருகிறார்களா? என்பதைக் கண்காணிப்பது போல, பச்சைக்கு நெருக்கமான முட்டம் ஆனந்த், அந்தப் பகுதியிலேயே இரவுவரை இருந்தார். 

தேனி ஓ.பன்னீர்


அரசாங்கத்தில் ஜெயலலிதாவுக்கு அடுத்து இருக்கும் ஓ.பன்னீருக்கு, மாவட்டத்தில் தங்கதமிழ்ச்செல்வன் என்றால் ஆகாது. தலைக்கு மேலே வெள்ளம் வரலாம் எனும்போது அதைப் பார்க்கமுடியுமா? தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளரான கூடலூர் நகர்மன்றத் தலைவர் அருண்குமாரிடம் பன்னீரே பேசி, வாக்குகளைத் திரட்டுமாறு கேட்டுக்கொண்டார். அதே கோஷ்டியைச் சேர்ந்த ஆண்டிப்பட்டி ஒ.செ. பால்பாண்டி மூலம், பணப் பட்டுவாடா செய்ய பொறுப்பை ஒப்படைத்தார். ஆனால் அவர் தரப்பிலோ கட்சியினர், நடுநிலை வாக்காளர்களுக்கு மட்டும் பணம் தரப்பட்டது எனத் தெரியவந்தது. இதனால், பன்னீர் ஆதரவாளர் லோகிராஜன் மூலம் தி.மு.க.வினருக்கும் பணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

போடி தொகுதியில் பன்னீரின் சாதிக்காரர்களான மறவர்கள் தங்களுக்கு எதுவும் செய்யவில்லையென அவர் மீது அதிருப்தியாக உள்ளனர். இதைச் சரிக்கட்ட போடி-மூணாறு போகும் வழியில் உள்ள நண்பர் காட்டேஜில் 22-ஆம் தேதியன்று சாதிக்காரர்களைக் கூப்பிட்டு சமாதானம் பேசியிருக் கிறார் பன்னீர். 

மாதவரம் மூர்த்தி


திருவள்ளூர் தொகுதிக்குட்பட்ட மாதவரம், ஆவடி, பூந்தமல்லி இந்த மூன்று ஏரியாக்களும் மாதவரம் மூர்த்தியின் பொறுப்பில் இருந்ததால் அங்கே பட்டுவாடாவை கனஜோராக கவனித்துக்கொண்டார் அமைச்சர் மாதவரம் மூர்த்தி. போனிலேயே வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதேநேரத்தில் வடசென்னை தொகுதியில் முன்னாள் சபா ஜெயக்குமார் பொறுப்பில் கடைசி 2 நாட்கள் வடசென்னை முழுவதும் செம ஸ்பீடாக விநியோகம் நடந்துகொண்டி ருந்தது. இதில் மாதவரம் மூர்த்தியின் ஆதரவு நிர்வாகிகளும், அவைத்தலைவர் மதுசூதனன்        ஆதரவு நிர்வாகிகளும் ஓரங்கட்டப்பட்டு ஜெயக்குமா ருக்கு வேண்டிய ராமஜெயம், பழனி போன்றவர்கள் கையில்தான் பணம் புழங்குவதாகத் தொடர்ச்சியாகப் புகார்கள். "இது மோதலில்தான் போய் முடியும்' என தகவல் வந்ததால் மாதவரம் மூர்த்தி, மதுசூதனன், ஜெயக்குமார் மூவரும் ஒரேகாரில் வடசென்னை முழுவதும் சுற்றி வந்து அதிருப்தியை அடக்கியபடி இருந்தனர். 

புதுக்கோட்டை விஜயபாஸ்கர்


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, கரூர் எம்.பி தொகுதிக்குள் வருகிறது. இங்கு அன்னவாசல் மேட்டுத் தெருவில் பண விநி யோகத்தில் இருந்த அ.தி.மு.க ராஜ்கபூர் 66 ஆயிரம் ரூபாயுடன் பறக்கும்படை ராஜேஷிடம் சிக்க... அதை பறக்கும்படை வீடியோகிராபர் செல்வம் பதிவு செய்துவிட்டார். அந்தநேரத்தில் விஷயமறிந்து அங்கு வந்த அதி.மு.க. நிர்வாகிகள், அந்த வீடியோ கேமராவைப் பறித்து உடைத்துவிட்டனர். இந்தத் தகவல் விஜயபாஸ்கருக்குப் போக... அவர் உடனே பறக்கும் படை அதிகாரியிடம், ""சார் இதை பெருசு படுத்தாதீங்க. புது கேமரா வாங்கித் தர்றோம்'' என்று சமா தானம் பேச ஆரம்பித்து விட்டார். 

பறக்கும்படை தரப்பு ஒப்புக்கொள்ளாததால், சமாதானப்படலம் நீடித்தது. மாவட்ட ஆட்சியர் மனோ கரனுக்குத் தகவல் போன நிலையிலும் எதுவும் நடக்கவில்லை.

""எங்க கலெக்டர்தான் மந்திரிக்கு லட்டு ஊட்டி, போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறாரே, அப்புறம் எப்படி நடவடிக்கை இருக்கும்?'' என்று லட்டு ஊட்டும் படத்தைக் காட்டுகிறார்கள் மற்ற கட்சியினர். சிவகங்கை எம்.பி தொகுதிக்குள் வரும் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது பெயருடன் ரப்பர் ஸ்டாம்ப் போட்ட கவரிலேயே 500 ரூபாய் வைத்து விநியோகம் செய்து அசத்திவிட்டார். 

மத்தியசென்னை அப்துல் ரஹீம்


மத்திய சென்னையின் பொறுப் பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார் ஆவடியைச் சேர்ந்த அமைச்சர் அப்துல் ரஹீம். பொறுப்பாளர்களான மேயர் சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவோடு இணைந்து வலம் வந்தார். ஆனாலும் முழுமையான பங்களிப்பைக் காட்டியது சைதை துரைசாமி தரப்புதான். தரவேண்டிய பங்கை தராமல் டிமிக்கி கொடுத்தாராம் ரஹீம். 

அதுபற்றி கவலைப்படாமல் சைதை தரப்பே வாக்காளர்களை கவனிப்பதில்  புகுந்து விளையாடியது. 22-ந் தேதி இரவு 6 பகுதிச் செயலாளர்கள், 70 வட்டச் செயலாளர்களை அழைத்து விவாதித்தது மூவர் அணி. கடைசி நேர விநியோ கத்திற்காக பகுதிக்கு 10 லட்சத்தை ஒதுக்க, அவர்களால் முஸ்லிம் பகுதிக்குள் நுழையவே முடியவில்லை. ஆயிரம் விளக்கு, திருவல்லிக் கேணி, புதுப்பேட்டை, சேத்பட், துறைமுகம், மண்ணடி பகுதிகளுக்கு அமைச்சரே விசிட் அடித்தும் பணம் வாங் காமல் புறக்கணித்தனர் முஸ்லிம்கள். அமைச்ச ரைத் திட்டியும் தீர்த்தனர். முஸ்லிம் அல்லாத மற்ற பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு முடிந்த அளவுக்கு பட்டுவாடாவை செய்து முடித்தது மேயர் தரப்பு. அதேசமயம், பகுதிச் செயலாளர்களும், வட்டச் செய லாளர்களும்  50 சதவீதத்தை விநியோகித்து விட்டு 50 சதவீதத்தை ஸ்வாஹா செய்து விட்டனர். "ஆடித் தீர்த்த மந்திரிகளில் அமைதியாக இருந்ததும், ஒண்ணுமே செய்ய முடியாமல் தவித்ததும் அப்துல் ரஹீம்தான்' என்கிறார்கள் மத்தியசென்னை ர.ர.க்கள்.

திண்டுக்கல் நத்தம் விஸ்வநாதன்


திண்டுக்கல்லில் கடந்த 21ஆம் தேதி காலை 10 மணிக்கு தொகுதிப் பொறுப்பாளர்களைக் கூப்பிட்டுப் பேசினார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். வந் திருந்தவர்களிடம், ""தி.மு.க.வைவிட அ.தி.மு.க. அதிக ஓட்டு வாங்கணும். இல்லைனா நீங்க பதவியில் நீடிக்க முடியாது''’ என கடுமையான தொனியில் எச்சரிக்கை விடுத்தார். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள அ.தி.மு.க. நடுநிலை வாக்காளர்களுக்கு தலைக்கு ரூ.200 வீதம்  கொடுத்து அனுப்பியுள்ளார். அதையடுத்து 100 வாக்காளர்களுக்கு ஒருவர் எனப் பிரித்துக்கொண்டு பணப் பட்டுவாடா செய்யப்பட்டது. 

ஐ.பெரியசாமியின் பூர்வீகமான வத்தலக்குண்டு பகுதியில் 18 வார்டுகளிலும் அ.தி.மு.க.வினர் பணம்தர முயன் றும் முடியவில்லை. அதையடுத்து அமைச்சர் விசுவநாதனே மதியம் அங்கு வந்து பொறுப்பாளர்களான ந.செ. பீர்முகமது, ஒ.செ.பாண்டி, ஒன்றியத் தலைவர் மோகன் ஆகியோரைச் சந்தித்து, அவர்களிடம் கோபமாகப் பேசினார். “"பதவியைத் தக்க வைக்கணும்னா எப்படியாவது அதிக ஓட்டுகள் வாங்கி யாகணும்'’என்று மிரட்டாத குறைதான். ஐ.பெரியசாமிக்கு செல்வாக்கான இந்தத் தொகுதியில் தி.மு.க.வை விட 25 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெறுவதாக எடுத்த சபதத்தையும் நிறைவேற்ற வேண்டுமே? இதனால், தன் மைத்துனர் கண்ணனையும் அ.தி.மு.க.வின் முன்னாள் பொருளாளர் சீனிவாசனையும் கடைசி நேரத்தில் அங்கு களமிறக்கினார். ரூ.500-700 வரை கொடுக்கப்பட்டுள்ளது. ஆத்தூர் நகரம், பாறைப்பட்டி, கரிசல்பட்டி போன்ற ஐ.பெரியசாமியின் செல்வாக்குப் பகுதிகளில் இரண்டாவது முறையும் பணம் வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளர் காந்திராஜன் முன்னர் அ.தி.மு.க.வில் இருந்தபோது அவரை ஆதரித்தவர்கள் பழைய பாசத்தைக் காட்ட லாம் என்பதால், அவர் களைக் கண்காணிக்கு மாறு ஆட்களை ஏவினார் விச்சு. பதவிபடுத்தும் பாட் டில், வேட்பாளர் உதயகுமாரை, கடைசி 2 நாள்களில் அவ ருடைய பகுதியான நிலக் கோட்டையிலேயே இருந்து அங்குள்ள வேலைகளைப் பார்க் கச் சொல்லிவிட்டு, முழுக்க களம் இறங்கினார் அமைச்சர் விச்சு. 

ஸ்ரீபெரும்புதூர் சின்னையா


காஞ்சிபுரத்தில் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த போஸ்என்பவரை சந்தித்து கடைசி நேர ஆதரவைப் பெற்றார்.  பிள்ளையார் பாளையம் பகுதியில் முதலியார் ஓட்டுகள் அதிகம் என்பதால் சோமசுந்தரம், காஞ்சி பன்னீர்செல்வம் ஆகியோருடன் போய் அவர்களிடம் பேசினார் சின்னையா. தலித் வாக்குகளைக் கவர புரட்சி பாரதம் நிர்வாகிகளைப் பயன்படுத்திக்கொண்டார். செய்யூர் பகுதிக்கு 3 நாள் ஸ்பெஷல் கவனம் செலுத்தப்பட்டது. அதுமட்டு மில்லாமல், மாவட்டத்தில் உள்ள ஓட்டல் சங்கத்தினரை வரவைத்து, ""எங்களுக்கு ஆதரவு தந்து ஜெயிக்க வைத்தால் உங்க தொழில் நல்லபடியா இருக்கும்'' என்று சொல்லியிருக்கிறார். வன்னியர் சமுதாயத்தை மட்டும் அ.தி.மு.க தரப்பு நெருங்கவில்லை.

திருப்போரூரில் வேட்பாளர் மரகதம் குமாரவேலுக்கும் நிர்வாகிகளுக்கும் ஆகவில்லை என்பதால் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களை ஸ்பாட்டுக்கு அழைத்து பணப்பட்டுவாடா செய்தார் சின்னையா. அவர்களின் கையில் கொடுக்கப்பட்டிருந்த லிஸ்ட்டில் உள்ள மாற்றுக்கட்சிக்காரர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் பணப்பட்டுவாடா நடந்தது. "யாருக்காவது பணம் கிடைக்கலைனு புகார் வந்தா அவ்வளவுதான்' என்று எச்சரித்து அனுப்பினார். 

சின்னையாவுக்கு அதிகப் பொறுப்பு ஸ்ரீபெரும்புதூரில்தான். "எக்காரணம் கொண்டும் தி.மு.கவின் ஜெகத்ரட்சகன் ஜெயித்துவிடக் கூடாது என்ற மேலிட இன்ஸ்ட்ரக்ஷனால் படுதீவிரமாக பணப் பட்டுவாடா செய்ய முடிவானது. மொத்தம் 20 லட்சம் வாக்காளர்கள். அதனால் 20சி, ஓ.பி. மூலம் சின்னையாவுக்கு வந்தது' என்கிறார்கள் கட்சிக்காரர்கள். அதில் "அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு ஒதுக்க வேண்டியதில் பாதியை மட்டுமே ஒதுக்கினார்' என அதற்குப் பொறுப்பாளரான மாநில இளைஞரணி செயலாளர் அலெக்சாண்டர், ஓ.பியிடம் புகார் தெரிவிக்க, ஓ.பி. இதுபற்றி கேட்டபோது சின்னையா மறுக்க... டென்ஷனான அலெக்ஸ் நேரடியாகவே சின்னையாவிடம் வந்து பண விவகாரமாக சண்டை போட ஆரம்பித்துவிட்டார். கடைசி நேர பரபரப்பால் கட்சி நிர்வாகிகள் மிரண்டு போய், அடிதடி ஏதும் நடக்காதபடி தடுத்துவிட்டனர். "திட்டமிட்ட அமௌண்ட்டில் பாதிகூட கீழே போகவில்லை' என்ற புலம்பல் பரவலாகக் கேட்கிறது.

இதற்கிடையே ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரன் 35 லட்ச ரூபாய் பணத்துடன் சிக்கிக்கொண்ட தாக பி.டி.ஐ நிறுவனம் செய்தி வெளியிட, அவர் விபத்தில் சிக்கிக்கொண்ட தாக இன்னொரு தரப்பில் செய்தி பரவியது. இதுபற்றி வந்த போன்கால் களுக்கு பதில் சொல்வதற்கே சின்னையாவுக்கு கடைசி நேரம் சரியானது. ""எல்லாம் ஜெகத் கிளப்பி விடுற வேலைய்யா'' எனப் புலம்பியபடியே இருந் தார். 

இராமநாதபுரம் சுந்தரராஜன்


"""நித்ய கண்டம் பூரண ஆயுசு' என பழமொழி யாருக்குப் பொருந்துதோ... இல்லையோ எங்க அமைச்சருக்குப் பொருந்தும். ஏற்கனவே நீக்கல் பட்டியல்ல இருந்தவரு. எப்பாடுபட்டாவது, இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை கரையேத்த வேலை பார்த்தாரு தெரியு மா?'' என்கிறார்கள் இராமநாதபுர ர.ர.க் கள். எதிர்கோஷ்டியா செயல்படும் முன் னாள் நகர செயலாளர் ஜமால்,  முன்னாள் எம்.எல்.ஏ. பாலுச்சாமி, போகளூர் நாக நாதன், நயினார்கோவில் வி.கே.பி. கார் மேகம், முதுகுளத்தூர் முருகன் எம்.எல்.ஏ. இவங்களையெல்லாம், பரமக்குடி ஐ.டி.ஐ-க்கு எதிரிலுள்ள தண்டறா தேவிப்பட்டினம் தோப்புக்கு வரவச்சாரு அமைச்சர். ""நான் உங்களுக்கு பிடிக் காமல் எது செய்திருந் தாலும் என்னை மன்னித்து விடுங்கள்'' என மனம் நெகிழப் பேசி அவர்களை அசத்த... வந்தவர்களோ, "நீங்க இப்படி போய்...' என பதிலுக்கு பேச, அந்த இடமே சினிமா காட்சி அரங்கம் மாதிரி ஆகிவிட்டது. சாப்பிட்ட பிறகு முதுகுளத்தூர் எம்.எல்.ஏ.முருகன் அருகில் உட்கார்ந்த அமைச்சர்... ""நான் உனக்கு எந்தக் காலத்திலேயும் கெடுதல் பண்ண மாட்டேன் ஐயா. இந்தா இதை வாங்கிக்க'' என வெள்ளைக் காகிதத்தை நீட்டியுள் ளார். அந்த காகிதத்தை வாங்கிய எம்.எல்.ஏ.வின் கண்ணில் கண்ணீர். சவட்டு மண் கடத்தியதாக எஃப்.ஐ.ஆரில் இருந்த முருகன் பெயர் நீக்கப்பட்டிருந்தது.

தலித்களின் வாக்குகள் அ.தி.மு.க. விற்கு வராது. பரமக்குடி, செல்லூர், மரு தகம், தேரிருவேலி, எட்டிச்சேரி, பொந்தம் புளி, காமன்கோட்டை, போகளூர், பார்த்தி பனூர், சத்திரக்குடி ஆகிய ஊர்களுக்கும் சென்ற அமைச்சர், ""இமானுவேல் சேகரன் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வுள்ளது. கொஞ்சம் எனக்காக பொறு மையா இருக்கணும்'' என திண்ணை பிரச்சாரம் செய்ததோடு மட்டுமில்லாமல்  கும்பிட்டும் விழுந்திருக்கிறார்.

திருப்பூர் தோப்பு வெங்கடாசலம் 


தலைமை அனுப்பி வைத்த கரன்ஸி பண்டல்களை பெருந்துறையில் இருக்கும் ஒரு பனியன் கம்பெனியில் இறக்கிய அமைச்சர் தோப்பு, அந்த பனியன் கம்பெனி நபர்கள் மூலமே பரவலாக விநியோகிக்க வைத்தார். ர.ர.க்கள் கை காட்டும் நபர்களுக்கு பனியன் தரப்பு கொடுத்தபடியே இருந் தது.  தனது பெருந்துறை தொகுதியில் கூடுதல் ஓட்டை வாங்க நினைத்த அமைச்சர், அங்குள்ள தலித் பகுதிகளுக்கு கூடுதலாக தன் பணத்திலிருந்து தலா 300-ஐ விநியோகிக்க வைத்தார். தே.மு.தி.க. நிர்வாகிகளின் பட்டி யலை எடுக்கச் சொன்ன தோப்பு, தொகுதிச் செயலாளர் கந்தசாமி, கோபி நகரச் செயலாளர் சையத் ஆகியோர் மூலம் அவர்களை இரவில் சரிக்கட்டி சைலண்ட் ஆக்கினார். 23-ந் தேதி அந்தியூர் தொகுதியில் விசிட் அடித்த தோப்பு, அங்குள்ள காக்காயனூரில் இலைப்புள்ளி களை வரவழைத்து, "ஒழுங்காகப் பணம் போனதா? எங்கே வீக்? அங்கே யாரை சரிக்கட்ட வேண்டும்?' என்றெல்லாம் விசாரணை நடத்தி, ஆகவேண்டியதையும் செய்தார்.

நாகை காமராஜ்


உணவு அமைச்சருக்கு தீனி போடுவதே இந்தத் தேர்தலில் பெரும் பாடாக இருந்தது. நாகை தொகுதி பொறுப்பாளரான காமராஜ் இறுதி கட்டமாக வலங்கைமானில் தனது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை சந்தித்து, ""இந்தத் தேர்தல் எனக்கு வாழ்வா சாவா பிரச்சினை. என்னோட அமைச்சர் பதவிக்கு ஆபத்து வராம இருக்கணும்னா அது உங்க கையிலேதான் இருக் குது'' என்று சொல்லியிருக் கிறார்.

அவர்களோ, ""உங் களை ஜெயிக்க வச்சதுக்கு எங்களுக்கு என்ன செஞ்சீங்க? தனியா இருந்த வலங்கைமான் இப்ப உங்க நன்னிலம் தொகுதியிலே இருக்குது. பேருக்கு ஒரு எம்.எல்.ஏ ஆபீஸ் இருந்தது. அதுக்கும் நீங்க கரண்ட்பில் கட்டாத தால் நாதியத்துக் கிடக்குது. இப்பதான் இந்த ஏரியாவே உங்க கண்ணுக்குத் தெரியுது. நம்ம உறவு மட்டும் எப்போதும் போல இருக்கும். ஓட்டு யாருக்குங்கிறதை நாங்கதான் முடிவு செய்வோம்'' என்று சொல்லி அனுப்பிவிட் டார்கள்.  

 திருவள்ளூர் ரமணா


திருவள்ளூர் நாடாளுமன்றத்தொகுதிக்கு இவரும் ஒரு பொறுப்பாளர். ஓட்டுக்கு 200 ரூபாய் என தலைமை கொடுத்த பணத்தை 75 சதவீதம் மக்களுக்கு விநியோகம் செய்ய ஒ.செக்கள், கிளைக்கழக நிர்வாகிகளிடம் கொண்டு போய் சேர்க்க  சூப்பர் கமிட்டியை அமைத்தார். இந்த கமிட்டி யிலுள்ளவர்கள் பெரும்பாலும் கட்சிப்பொறுப்பு களில் இல்லாதவர்கள். தொகுதியில் பணத்தை வைத்திருந்தால் சிக்கிக்கொள்வோம் என்று உஷாரான ரமணா அம்பத்தூர், கொரட்டூர், அண்ணாநகர் என தொகுதிக்கு வெளியில் இருந்துகொண்டு பணத்தை  கட்சிப் பொறுப் பாளர்களுக்கு அனுப்பினார். தலைமை கொடுத்த பணத்தோடு... தன்னுடைய அமைச்சர் பதவியை காப்பாற்றிக்கொள்ள இரண்டு நாட்களில் மட்டுமே ஒரு பூத் கமிட்டிக்கு 10,000 ரூபாய் வீதம் 1650 பூத்துக்கு 1 கோடியே 65 லட்சம் கொடுத்திருக்கிறார். சிட்டிங் எம்.பி. வேணுகோபால் "எங்கிட்ட பணமில்லை' என்று  50 லட்சத்தை எடுத்து நீட்ட... "இதை வெச்சுக்கிட்டு என்னத்த பண்றது' என்று புலம்பிய அமைச்சர் ரமணா, கடந்த 40 நாட்களாக  செலவு செய்த கோடிகள் நிறைய. 

தேர்தல் வேலை பார்க்கும் ர.ர.க்களுக்கு ஒரு பக்கம்... இன்னொரு பக்கம் "நாங்க தலைமையிலிருந்து வர்றோம், அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தர்றோம்'னு சொல்லிக்கிட்டு லெட்டர்பேட் கட்சிகள், சங்கங்கள், அமைப்புகள் எல்லாம் வந்து அமைச்சரை முற்றுகையிட... அவர்களுக்கு 25 ஆயிரம், 30 ஆயிரம் என ஒவ்வொருத்தருக்கு ஒரு ரேட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

திருப்பூர் ஆனந்தன்


ஒருபக்கம் 100 ரூ, 500 ரூபாய் நோட்டுகளாக சில்லறைப் பட்டுவாடா. மறுபக்கம் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கட்டுகள் அடங்கிய சூட்கேஸ் கள் என்று வாக்குப் பதிவுக்கு முன்னிரவு வரை சுறுசுறுப்பாக இயங்கியவர் வனத்துறை ஆனந்தன்.

""சூரியனைவிட, முரசைவிட ஏழெட்டு சதவீதம் லீடிங்ல நம்ம சத்யபாமா ஜெயிப் பாங்கனு நக்கீரன்லயே போட்டிருக்கான். அதுக்காக கருணைக்கிழங்கா நாம இருக்கக்கூடாது. ஏடா கூடமா ஏதாவது ஆனால் வனத்துறை என்னை விட்டுட்டுப் போயிடும்'' என்று வெளிப்படையாகக் கூறி செயல்வீரர் களோடு கலந்து நின்று வீட்டுக்கு வீடு ஓட்டுக்கு மொய் கொடுக்கத் தூண்டிக்கொண்டிருந்தார் அமைச்சர் ஆனந் தன். ""கடைசி ரெண்டு நாளும் மத்த அமைச்சர்கள் எல்லோரும்  ஓட்டு பற்றி கவலைப்பட்டாங்க. இவரு 10 லட்சம் கொடு, 20 லட்சம் கொடுனு எங்க மாதிரி தனியார் பள்ளிக்கூட தாளாளர்களின் உசுரை வாங்கிவிட்டார் என்ன செய்வது? பாதிக்கும் மேற்பட்ட ஸ்கூல்ல கொடுத்துட்டாங்க'' அமைச்சரின் கெடுபிடி பற்றி புழுங்கினார்கள் தனியார் பள்ளி முதலாளிகள்.

ஆனாலும் ஓட்டுக்குத் துட்டு என்ற குறிக்கோளில் எந்தக் குறையும் வைக்கவில்லை வனத்துறை.

தருமபுரி பழனியப்பன்


தருமபுரி தொகுதியில் 21-4-14 திங்கள் இரவே நோட்டு விதைப்பு தொடங்கப்பட்டு விட்டது. விதைப்பு ஒழுங்காக நடக்கிறதா என்று தூக்கத்தை துறந்து தொகுதி முழுக்க காரில் வலம் வந்தார் உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன். பென்னாகரம் அ.தி.மு.க. நிர்வாகிகளான அன்பழகன் மற்றும் ஆறுமுகத்திடம் ""பென்னாகரம்தான் ரொம்ப பலகீனமா இருக்கு. அப்புறம் எனக்குத்தான் தலைகுனிவு ஆகிப்போகும். நம்ம கட்சி நிர்வாகிகளை கூட்டிட்டு வாங்க'' என்றார். கூட்டி வரப்பட்ட அவர்களிடம் மொத்தமாகக் கொடுத்து ""தலித் ஓட்டுகள் பிரியக்கூடாது. பிரிஞ்சா பா.ம.க. ஜெயிச்சுடும். தாராளமா கொடுங்க, சத்தியம் வாங்கிக்கங்க'' அனுப்பி வைத்தார்.

விஷயம் பா.ம.க.வினர் மூலம் அதிகாரிகளுக்குப் போனது. தலித் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்துகொண்டிருந்த முருகன், மணிவண்ணன், வேலு உள்ளிட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த லட்சங்களையும் பறிமுதல் செய்தனர்.

""மினிஸ்டர் பழனியப்பன் சொல்லித்தானே எல்லாம் செஞ்சோம். எஸ்.பி. அஸ்ரா கார்க்கிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துட்டேன், விடமாட்டேங்கறார். மினிஸ்டரும், மா.செ.யும் செல்போனை ஆஃப் பண்ணிட்டாங்க. இவங்களை நம்பினதுக்கு இது வேணும்யா'' புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் ஆறுமுகமும், அன்பழகனும்.

தன் பி.ஏ. சக்திவேலிடம் பெருந்தொகையை கொடுத்து, பாப்பிரெட்டிப்பட்டிக்கு அனுப்பிய அமைச்சர் பழனியப்பன், "" "தருமபுரியில் அ.தி.மு.க. தோல்விக்கு அமைச்சர் பழனியப்பன்தான் காரணம்'னு நம்ம கட்சிக்காரங்களே பிட் நோட்டீஸ் அடிச்சு பரப்பிட்டானுங்க. அந்த நோட்டீஸை அடிச்சது யார், யார்னு எனக்குத் தெரிஞ்சாகணும்''... 23-4-14 நள்ளிரவில் கட்சியினரை வறுத்தெடுத்த அமைச்சர் பழனியப்பனுக்கு 24-4-14 காலையில் தருமபுரித் தொகுதியின் பல பூத்துகளில் இருந்தும் வந்த செய்தி பதட்டத்தை உண்டாக்கிவிட்டது. 

உடனே கலெக்டர் விவேகானந்தனைத் தொடர்புகொண்ட அவர் ""என்னங்க இது பெரிய அநியாயமா இருக்கு? அத்தனை பூத்துகளையும் பா.ம.க.காரங்க கேப்ஸர் பண்ணியிருக்காங்க. உள்ளே அ.தி.மு.க. ஏஜெண்டு உட்காரக்கூடாது என்று பிடரியைப் பிடித்து வெளியே தள்ளிட்டாங்க. தொகுதி முழுக்க இந்த அராஜகம் நடந்துகொண்டிருக்கு'' அலறத் தொடங்கினார் அமைச்சர்.

சிவகங்கை ஆர்.பி.உதயகுமார்


""கண்ணப்பனுக்கு சீட் கொடுக்காததால் யாதவ சமுதாய வாக்குகளின் அதிருப்தி, இராஜகண்ணப்பனின் ஆதரவாளரும், சிவகங்கை தேர்தல் தொகுதிச் செயலாளர் தமறாக்கி பாஸ்கரன் அம்பலம் ஒத்துழை யாமை ஆகியவற்றால், நொந்துபோன அமைச்சர் உதயகுமார், சிவகங்கை செந்தமிழ் நகரிலுள்ள இராஜகண்ணப்பனின் வீட்டிற்குச் சென்றார். கூச்சம் பார்க்காமல், சபை நாகரிகம் பார்க்காமல் இராஜ கண்ணப்பனின் காலில் பொத்தென விழுந்து... ""நான் என்ன தப்பு பண்ணினாலும் என்னை மன்னிச்சிடுங்க''  என அரற்ற... சம்பவத்தை எதிர்பார்க்காத கண்ணப்பனும் மிரண்டுபோய் ஒத்துழைப்பு தருவதாய்ச் சொன்ன பிறகே எழுந்துள்ளார் அமைச்சர்.

இது இப்படியிருக்க... 

""நீங்கதான் அடுத்த மாவட்ட செயலாளர், நீங்கதான் அம்மா பேரவை செயலாளர், நீங்கதான் அடுத்த ஒன்றிய செயலாளர்'' என மாவட்டத்தில் உறுதிமொழி களை வாரி வழங்கி இருக்கிறார் ஆர்.பி.உதயகுமார். ஞாயிற்றுக் கிழமை வாக்கில் ஒரு பிரிவினருக்கு, திங்கட்கிழமை வாக்கில் மற்றொரு பிரிவினருக்கு விருந்துகளாக வைத்து உசுப்பிவிட... அதன் பிறகு "நான்தான் மா.செ., நான்தான் ஒ.செ.' என குரல்கள் ஒலிக்க... உதயகுமாரோ ரிலாக்ஸாக வேடிக்கைப் பார்க்கி றார். கல்லல் பகுதி பா.ஜ.க. ஒன்றிய தலைவர் கட்டத் தேவனையும், செயலாளர் வெள்ளைத்துரையை யும் அ.தி.மு.க.விற்கு அழைத்து வந்து காட்டி யிருக்கிறார் உதய குமார்.

நாமக்கல் தங்கமணி


நாமக்கல் தொகுதி யின் பொறுப்பாளராக வஞ்சகமில்லாமல் பாடுபட்ட நாமக்கல் மா.செ.யும், குமார பாளையம் ச.ம. உறுப்பினரும், மாண்புமிகு தொழில் துறையு மான தங்கமணிக்கு தொகுதி ர.ர.க்களிடமும் தொழிலதிபர் களிடமும் நல்ல பெயர்.

""வசூலையெல்லாம் வெளியில வச்சுக்கிட்டாரு. டொனேஷன் கேட்டு எங்களை வாட்டி வதைக்கலீங்க'' தொழிலதிபர்களின் பாராட்டுக்கு காரணம் இது.

""அமைச்சர் தகதகனு நல்ல செகப்பு. வெய்யில்ல அலையோ அலையினு அலைஞ்சதுல நனைஞ்ச பனை மாதிரி கறுத்துப் போயிட்டாரு. 22-ஆம் தேதி திருச்செங்கோட்ல இருந்து குமாரபாளையம் வரை, 23-ஆம் தேதி ராசிபுரத்தில் இருந்து நாமக்கல்லுக்கு மோட்டார் பைக் பிரச்சாரம், 800 மோட்டார் பைக்குகள், அதுல ஒண்ணுல அமைச்சரும் வந்தார். 15 கோடி வரை செலவு செய்ய முடியும்னு தலைமைக்கு எழுதிக் குடுத்திருந்தாராம். தாராளமா செலவு செஞ்சாருங்க. வேட்பாளர் சுந்தரமும் பசை பார்ட்டிதானுங்க. எழுதிக்கொடுத்ததில் முக்கால் வாசியை கடைசி ரெண்டு நாள்லதான் வாரிக்கொடுத் தார்கள்'' அமைச்சர் கொடுத்ததைவிட தாராளமாகப் பாராட்டுகிறார்கள் நாமக்கல் இலை நிர்வாகிகள்.

விருதுநகர் ராஜேந்திரபாலாஜி


தலைக்கு ரூ.200 வீதம் 10 லட்சம் வாக்காளர்களுக்கு ரூ.20 கோடி மேலிடத்திலிருந்து வந்திருக்கிறது. சொற்ப அளவிலேயே செலவழித்த விருதுநகர் அ.தி.மு.க. எம்.பி. வேட்பாளர் ராதாகிருஷ்ணன் ""இதுக்கு மேல என்னால முடியாது. நீயே பார்த்துக்க...''’என்று கடைசி நேரத்தில் கை விரித்து விட... மேலும் ரூ.11 கோடிவரை விருதுநகர் தொகுதிக்காக இறைத்திருக்கிறார் மாவட்ட மந்திரியான ராஜேந்திரபாலாஜி. ஆனாலும், பட்டுவாடா சரியாக நடக்காதது குறித்து விருதுநகர், அருப்புக்கோட்டை போன்ற ஊர்களிலிருந்து மந்திரிக்கு புகார் வந்திருக்கிறது.  மேலும் ஆனையூர் போன்ற  பல கிராமங்களில் வாக் காளர்களுக்கு  பணம் போய் சேராத தகவல் வந்தபடியே இருந்திருக்கிறது. இந்த ஆத்திரத்தில் நேரிலும், போனிலும் கட்சிப் பொறுப்பாளர்களை திட்டித் தீர்த்திருக்கிறார் மந்திரி. ""நீங்க யாரும் சரியா வேலை செய்யல. ஒருவேளை ராதா கிருஷ்ணன் தோற்று எனக்கு பதவி போச்சுன்னு வச்சுக்கங்க. உங்க எல்லாரையும் பதவியில இருக்க விடமாட்டேன்''’என்று டென்ஷன் ஆகி கத்தியிருக்கிறார். பதிலுக்கு பொறுப்பாளர் கள் சிலரும் ""கட்சிக்காரனை நீங்க எங்கே மதிச்சிருக்கீங்க? கட்சிக்காரனுக்கு என்ன பண்ணியிருக்கீங்க? சரியில்லாத வேட்பாளரை நீங்களா போட்டுட்டு எங்களை குற்றம் சொன்னா எப்படி?''’என்று சீறியிருக் கிறார்கள். பிறகு தனக்கு நெருக்கமான வர்களிடம் “சிறுபான்மை (விஸ்வகர்ம) சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதால் தானே எனக்கு இந்த அளவுக்கு குடைச்சல் கொடுக்குறாங்க.. எஞ்சாதியில யாரு எம்.எல்.ஏ. ஆயிருக்கா? மந்திரி ஆயிருக்கா? மூணு வருஷம் இருந்துட்டேன்.. போதும்டா சாமி''’ என்று தேர்தல் நாள் வரை புலம்பியபடியே இருந்திருக்கிறார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. 

ஈரோடு தாமோதரன்


ஹார்ட் ஆபரேஷன் செய்து கொண்டவர். ஆனாலும் ஊக்கத்தோடு பிரித்துக் கொடுத்து அது ஒழுங்காக வாய்க்கால் வழியோடி வயல்களுக்கும் பாய்ந்ததா என்பதை தெரிந்து கொள்வதற்காக ராப்பகலாக உலா வந்தார் வேளாண்துறை அமைச்சர் தாமோதரன்.

ஈரோட்டில் அமைச்சர் இல்லாததால் பொள்ளாச்சியில் இருந்து ஈரோட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டார் தாமோ தரன். ""அமௌண்ட்டை முழுசா கொண்டுபோய் சேர்க்க ணும்ப்பா. நீங்க நெனைச்சா ஈஸியா என்னை ஏமாத்திப்பிட லாம். ஆனால் என்னால அம்மாவை  ஏமாத்த முடியாது, புரியுதா? 22-ஆம் தேதி காலை 6 மணிக்குள் ஈரோடு கிழக்கு, மேற்கு மற்றும் மொடக்குறிச்சி தொகுதிகளில் ரவுண்ட்ஸ் முடித்துவிட்டார். 

23-ஆம் தேதி காலையில் கே.வி.ராமலிங்கத்திடம் 20 எல் கொடுத்து, ""குறை வைக்காதீங்க. பத்தாட்டி சொல்லுங்க. அரேஞ்ச் பண்ணிடலாம்'' சொல்லி அனுப்பிவிட்டு மீண்டும் பட்டுவாடா கணக்கு வழக்கு லிஸ்ட்டுகளை கலெக்ட் பண்ணுவதற்குக் கிளம்பினார் தாமோதரன். 

புதுக்கோட்டை சுப்ரமணியன்


புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரான சுப்ரமணியத் திற்கு அவருடைய கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதியை மட்டும் கொடுத்திருந்தது கட்சி மேலிடம். திருச்சி எம்.பி. தொகுதிக்குள் இது வருகிறது. ஜெ.வின் ஸ்ரீரங்கம் தொகுதியும் திருச்சி எம்.பி. தொகுதிதான் என்பதால், அம்மா தொகுதி என்று கூடுதல் கவனம் செலுத்தினார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள். அமைச்சர் சுப்ரமணியத்திற்கோ சென்ற இடமெல்லாம் எதிர்ப்பு. கந்தர்வக் கோட்டை பஸ் ஸ்டாண்டை 32 ஊராட்சி மக்களின் எதிர்ப்பை மீறி சுடுகாட்டில் உள்ள பரசு ராமன் என்பவரின் இடத் திற்கு, அமைச்சர் வைத்தி லிங்கம்  சொன்னபடி மாற்றியதால்தான் சுப்ர மணியத்துக்கு இந்த நிலைமை, அதனால் தொகுதிக்குள் போவ தென்றாலே மாவட்டத்தின் வெயிட்டான அமைச்சர் விஜயபாஸ்கரை அழைத் துக்கொண்டுதான் சுற்றினார். 

கந்தர்வக்கோட்டைக்கான கடைசி நேர பட்டுவாடா பொறுப்பும் சுப்ரமணியத்திடமே ஒப்படைக்கப்பட்டது. தொகுதிப்பக்கம் போவ தற்குப் பயந்த சுப்ரமணியம் அதை தனக்குத் தெரிந்த கட்சிக்காரர் களிடம் கொடுத்து, "தலைக்கு 200ன்னு பட்டுவாடா பண்ணிடுங்க' என்று அனுப்பிவைத்தார். மாலையில் திரும்பிய அவர் கள், "கரெக்ட்டா கொடுத்தாச்சு' என்றனர். ஆனாலும், தொகுதியின் பல இடங்களில் பணம் வரலை என்ற குரல் ஒலிக்க ஆரம் பித்ததால் வாக்குப்பதிவு நாளன்று பதட்டமாகவே இருந்தார் அமைச்சர் சுப்ர மணியன்.

தென்காசி செந்தூர்பாண்டியன்


தென்மாவட்டங்களில் கூடுதல் தவிப்பிலிருப்பவர், அறநிலையத்துறை அமைச்சரும் தென்காசி தொகுதிப் பொறுப்பாளருமான செந்தூர்பாண்டியன். இடியாப்பச் சிக்கலில் சிக்கியிருக்கிறார் அவர். தென்காசி தொகுதியில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா மூன்று "சி'க்கள் இறக்கப்பட்டன. இது புளியங்குடி ந.செ. சங்கரபாண்டியனின் பொறுப்பிலிருந்த ஒரு "சி'யை அவருடன் வந்தவரே "லபக்'கிக் கொண்டுபோக...  தகவல் வெளிவந்துவிட்டது. பதற்றமான அமைச்சர் செந்தூர் பாண்டியன் காவல் தலைமைக்குப் பேச, அதற்கேற்ப மாவட்ட அதிகாரிகள் செயல்பட்டு "அந்தப்' பணம் மீட்கப் பட்டது. ஆனால் பெரிய தொகை எப்படி வந்தது என வருமானவரித்துறை சங்கரபாண்டியனின் வீட்டை ரெய்டு செய்து நெருக்கடி தர, அவரால் கணக்குக் காட்ட முடிய வில்லை. பணம் முழுவதும் கஜானாவில் சேர்க்கப்பட, பின்னால் இது பிரச்சனை ஆகும் என அறிந்த மேலிடம்... அமைச்சரைப் பிடித்து சரி டோஸ் விட்டிருக்கிறது. அவருக்கு பிரஷர் ஏறிவிட்டதாம். பதவி பற்றிய எதிர்கால நினைப்புகளால் படபடக்கும் அமைச்சர், தேவை யில்லாமல் டென்ஷனா கிறார். நிர்வாகிகளிடம் எரிச்சலைக் காட்டுகிறார்.

வைகோவின் சொந்த ஏரியாவான குருவிகுளம் ஒன்றியத்தில், ஒப்பந்தக்காரர்களிடம் "பணம் வாங்கி ஓட்டுக்கு கொடுங்க' என கி.செ.க்களுக்கு சொல்லப்பட்டது.

முக்கியமான பணிகளை மேலநீலிதநல்லூர் ஒன்றியத் தலைவர் முருகையா பாண்டியனிடம் அமைச்சர் செந்தூர்பாண்டியன் ஒப்படைக்க, "கட்சி மேலிடத்தால் கண்டிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டவரிடம் எப்படி தரலாம்?' என அமைச்சர் முகத்திற்கெதிராகவே கேட்டிருக் கிறார் பொறுப்பாளரான சுப்பிரமணியன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக