செவ்வாய், 29 ஏப்ரல், 2014


அரசியல் தலைவர்களை படுகொலை செய்ய கோபி திட்டமிட்டிருந்தார்?
அண்மையில் படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த கோபி என்ற செல்வநாயகம் கஜீபன், அரசியல் தலைவர்களை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தார் என பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த நிபுணராக கருதப்படும் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
மிகவும் அவசியமான தருணத்தில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக படையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
மேலும், உயிரிழந்த தேவியன் விமானங்கள் பற்றி சிறந்த அறிவாற்றல் மிக்கவர்.
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆலோசனைக்கு அமைய தேவியன் இந்தியாவின் தமிழக மாநிலத்திற்கு தப்பிச் சென்றிருந்தார்.
போர் நிறைவடைந்ததன் பின்னரே தேவியன் நாடு திரும்பியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக